தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த… “அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு 25.01.2026
மேலும்Author: admin
பிரான்சில் கலைக்கு மரியாதை செலுத்திய ஓர் ஆத்மார்த்தமான நினைவுப் பகிர்வு!
கலையை உயிருக்கு மேலாக நேசித்து, வில்லிசைக் கலையை வாழ்வாகக் கொண்டதோடு, சினிமா, நாடகம், இலக்கியம், பாடல் எழுதுதல், புத்தகப் படைப்புகள் என பல்துறைகளிலும் ஆளுமை மிக்க கலைஞராகத் திகழ்ந்த நாச்சிமார் கோயிலடி ராஜன் அவர்களின் நினைவினை போற்றும் வகையில், பாரிஸ் லாச்சப்பல் சோதியா மண்டபத்தில் ஒரு சிறப்புமிக்க நினைவுப் பகிர்வு நிகழ்வு இன்று 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேலும்தமிழ்மொழிப் பொதுத்தேர்வு -2026 இற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன!
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2026 இற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு அறிவித்துள்ளது.
மேலும்தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ம் ஆண்டு வீரவணக்கம்
தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல் தலைமைச்செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்2006-12-14
மேலும்தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு!
பிரான்சில் பேரெழுச்சியடைந்த மாவீரர் நாள் 2025 நினைவேந்தல் நிகழ்வு!
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த 27.11.2025 வியாழக்கிழமை 16 avenue de Saint-Germain 78560 Le Port-Marly பகுதியில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மேலும்சுவிசில் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71!
வரலாற்றின் பாதையில் தமிழினத்தை தலைநிமிரச்செய்து தமிழ்த் தேசியத்தின் பிறப்பாய் உதித்த பெருநெருப்பாம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை எழுபத்தொன்று தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும் மற்றவர்களுடன் வாழ்த்துகளையும் இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
மேலும்சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்விடுமுறை பாகம் 4
மெக்கானிக் கடையில் மோட்டார் சைக்கிளைத் திருத்தக் கொடுத்துவிட்டு, இருவரும் ஆளுக்கொரு திசையில் நேர் எதிராக அமர்ந்தனர். குரு ஒரு பழைய செய்தித்தாள் ஒன்றைத் தொட்டுப் புரட்டிக்கொண்டு இருந்தான்.குருவின் செயல்கள் மாறனுக்கு அப்போதைக்கப்போது சில சங்கடங்கள் கொடுத்தாலும், அவனுடைய குணாதிசயங்களை எண்ணி அவன் உள்ளுக்குள் ரசித்துக் கொண்டான். ‘இவன் எப்படி இயக்கத்திற்கு வந்தான்? இவனது இயல்புக்கும் இயக்கத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கும் இருக்கும் இடைவெளி மிக மிக அதிகம். இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், இவனால் ஒரு குழந்தை போலச் சுதந்திரமாக எப்படி இருக்க முடிகிறது? நாளையைப் பற்றிய கவலை அவனுக்குச் சிறிதும் இல்லை. போர்க்களத்தில் மூர்க்கத்தனமாகச் சண்டையிடுவான்; முகாமுக்குத் திரும்பியவுடன் தன் சேட்டைகளை ஆரம்பித்துவிடுவான். சகப் போராளிகளுக்கு ஆளுக்கொரு பட்டப்பெயர் வைத்துத்தான் கூப்பிடுவான்.’யாருமே இவனை கோபித்துக் கொள்வதில்லை. அவன் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக இருந்தது.
மேலும்காற்றாகி மூச்சிலேகலந்த வல்லமையோர்
கார்த்திகை போர்த்திடக் கருமுகில்நேர்த்தியாய்ப் பொழிந்திடும்வேர்த்திடும் வேர்களில் வீரமும் சேர்ந்தே முளைவிடும்-புகைபோர்த்திய எரிமலைக்குளம்புகள்ஆர்த்து வெடித்திடும்-மனக்கூட்டினுள் வெப்பம் குமுறிக்கொப்பளித்து வெளிவரும்பாட்டுக்கள் ஆயிரம் மாவீரப் பண்களாய்ப் பிறக்கும்ஆண்ட நம் தமிழீழத்திசைகள்அமைதியாய்த்துடிக்கும்-கடல்தாண்டியே தவிப்புடன் தமிழீழத்தாகம் தகிக்கும்மாண்டவர் கல்லறைக்கோவில்கள்மலர்க்கதவு திறக்கும்மலரட்டும் மண்மடி என்றேமாவீரம் சிலிர்க்கும்-நல்வாழ்வொன்றைக்காணத் தலைவனின்வழிசென்ற வீரர்சாதனை வென்று எழுதியசரித்திரக் காலமிது
மேலும்