தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்.

காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்….!

இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

மேலும்

ஐ.நா முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன்இன அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்றகவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!!

சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதினேழாவது ஆண்டிலும் ‘எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள’; என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும்

தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்

காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.

மேலும்

1987 செப்டம்பர் 14 ஆம் நாள் காலை அன்று காலை தமிழீழத்தில் தியாக தீபம்..

‘மன்மதன் இல்லம்’ என அழைக்கப்பட்ட தலைவரின் அலுவலக வளாகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தீலீபனும், அவரோடு 90 க்குப் பின்னர் சில வருடங்கள் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட ராஜனும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்தார்கள்.1987ஆகஸ்ட் 15 ஆம் நாள் தமிழ் நாட்டில் இருந்து இந்திய விமானத்தில் சென்று இறங்கிய காசி அண்ணாவும் நானும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தோம். தலைவர் அவர்களது அலுவலகப் பணிகள் எம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தன. திலீபனின் வருகையை தலைவருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து திலீபன் உள்ளே அழைக்கப்பட்டார். காசியண்ணா மற்றும் எங்களோடு ராஜன் பேசிக் கொண்டிருந்தார்.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற சங்கொலி 2026 தேச விடுதலைப் பாடல் தெரிவுப் போட்டி முடிவுகள்!

தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் தாயக விடுதலைப் பாடல் சங்கொலி 2026 விருதிற்கான தெரிவுப் போட்டி பாரிசின் புறநகர் பகுதியான நோசிலே செக் என்னும் இடத்தில் இன்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேலும்

பிரித்தானியாவில் 30.08.2026அன்று நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு.

கடந்த 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியா Hayes பகுதியில் முள்ளிவாய்க்கால் இறுதிக்களம் வரை களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு மகளிர் அணியினரால் நடாத்தப்பட்டது. தொடக்க நிகழ்வாக இளையோர்கள் மாவீரர்களின் திருவுருவப் படங்களைத் தாங்கி வர அதனைத் தொடர்ந்து அணிவகுப்புடன் மாவீரர்களின் பெற்றோர்உரித்துடையோர் மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டார்கள். தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின் பிரித்தானியக் கொடி ஏற்றப்பட்டு, தமிழீழத்தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

மேலும்

புதிய முகவரியில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகம் திறப்பு.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகம் Felsenausstrasse 17, 3004 Bern என்னும் புதிய முகவரியில் 30.08.2026 ஞாயிறு அன்று சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது. அமைப்பின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தி, ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்குடன் இந்தப் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்