தமிழ்மொழிப் பொதுத்தேர்வு -2026 இற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன!

0 0
Read Time:2 Minute, 23 Second

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2026 இற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு அறிவித்துள்ளது.


விண்ணப்ப முடிவுநாள்
தமிழ்ச்சோலை, தனியார் பள்ளிகளுக்கு : 11-01-2026
தனித்தேர்வர்களுக்கு : 18-01-2026

2002 ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்பட்டுவரும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுகளில் தமிழ்ச்சோலைகள், தனியார் பள்ளிகள், தனிதேர்வர்களாக பிரான்சின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

வளர்தமிழ் 01 தொடக்கம் 12 வரைக்குமான பன்னிரண்டு வகுப்புகளுக்குமான இத் தேர்வுகள் புலன்மொழிவளத் தேர்வு, எழுத்துத்தேர்வு என் இரு பகுதிகளாக நடத்தப்பட்டு வருகின்றது.
எழுத்துத்தேர்வு வழமைபோல பிரான்சின் அரச தேர்வு மண்டபமான Maison des Examens இல் 06-06-2026 சனிக்கிழமை அன்று இடம் பெறும்.

தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் பிரான்சில் உள்ள அனைத்துத் தமிழ்ச்சோலைப் பள்ளிகளையும் ஒன்றிணைத்து, 27 ஆண்டுகளாக தமிழ்ப்பணியாற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் நடந்த தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்களின் விபரத்தொகுப்பு

தனித்தேர்வர்களுக்கான தேர்வு விண்ணப்பபடிவத்தினைக் கீழுள்ள இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

https://tamoulcholai.fr/files/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20_2026.pdf

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment