இதயம் வலிக்கும் இந்தநாளில்………

2009 மே 18 ஈழத்தமிழினத்தின் நெஞ்சங்களில் நினைக்கும் தோறும் வலிக்கும் நாளாக மாறியிருக்கின்றது. தனித்துவமான ஓரினம் தன்னுடைய அடிப்படை உரிமைகளுடன் வாழ்வதற்காக எழுப்பிய குரலுக்காக, அந்த இனத்தையே இனவழிப்பு செய்த வலிமிகு நாளாக இந்நாள் ஈழத்தமிழினத்தின் நெஞ்சினில் அறையப்பட்டிருக்கிறது.

மேலும்

நெருப்பையள்ளித் தின்றவர் நாம், நாமார்க்கும் குடியல்லோம்….

பரட்டைத் தலைகளோடுபதுங்கு குழிக்குள்பட்டினியாய்க் கிடந்த நாட்கள்…சிரட்டையேந்திக் கஞ்சி உண்டுசிந்தை கலங்கி நின்ற நாட்கள்…

மேலும்

நடைப்பிணமாய் மருத்துவமனையை விட்டு நடந்தோம்…

நாங்கள் பங்கருக்க இருந்ததால் தப்பினாங்கள்,  நீங்கள் போய் கொஞ்சத்தில ஆமி வந்திட்டான். வரேக்க சுட்டுக்கொண்டுதான் வந்தவன், அதிலை நிறையபேர் செத்திட்டுதுகள், எஞ்சியிருந்த பெண்களையும் கொடுமைப்படுத்தி கண் முன்னால் சுட்டுக்கொன்றான், ஒரு சிலர் மட்டும் உயிர் தப்பினம்” என்று இன்று உயிருடன் இருக்கும் அவர் கூறினார்.

மேலும்

முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நினைவேந்தலும் ஈம வழிபாடும்

எம் உறவுகள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலின் பெருங்கடலோரத்தில் மே மாதம் 18ம் நாள், 2023 அன்று காலை 7:30 மணிமுதல்நீத்தார் நினைவேந்தல் நிகழ்வுகளும் ஆன்ம அமைதிக்கான தமிழ்வழி ஈமவழிபாடுகளும் உணவுக்கொடை வழங்கலும் நடைபெற இருக்கின்றன.

மேலும்

நெஞ்சுக்குழிக்குள் நெருப்பாய்.

தமிழர் எம்மைக் கொன்று புதைக்கஎத்தனையோ காலம் முதல் புத்தரின் பெயரால்எத்தனிப்புகள்….தமிழர் எம்மைச்அழித்தொழிக்க “திட்டங்கள்”எனும் பெயரால்சிங்கள அரசின் திட்டமிட்டவல் வளைப்புகள்….

மேலும்

லெப் கேணல் நவம் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள்!

லெப்.கேணல் நவம் படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். உனக்கு ஒரு கையில்லை இனி வீட்டிலேயே இரு. அன்பின் மேலீட்டால் இப்படியொரு வேண்டுகோளை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கினறது. தனக்கு இரக்கம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் சரியானவேளையென முடிவெடுக்கிறான்.

மேலும்

உன் சுவடுகள் பற்றி.

காலில் காயம்பட்டதனால் உனக்கும்வலித்திருக்கும், ஆனாலும்காடுமேடெல்லாம் உன் கால்கள்நடக்கத் தயங்கவில்லை,ஆதலால்தான், எம் கானகமும் நிலமும்களவுபோகாமல் காக்கப்பட்டது…

மேலும்

பிரிகேடியர் சொர்ணம்

எங்கெல்லாம் தேசியத்தலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55 (பைபை) யின் குரல் முழங்கும்.

மேலும்