Read Time:43 Second
காந்திய தேசத்தின் கபடம் கலைத்தவன்
அமைதிப்படையென அணியணியாய் வந்திறங்கி,
அவலம்தாங்கிய மக்களை
ஆரம்பத்தில் நம்பவைத்து-
இலங்கை அரசபடைகளின் அடிவருடிகளாக ஆக்கிரமித்த இந்தியப்படைகளின்
அரிதாரம் கலைத்து
அகிம்சைப்போரினால் உண்மையை அகிலத்திற்கேகாட்டியவன்
அண்ணன் திலீபனே..
காந்தியடிகளின் நோன்பையும் கடந்து
காலத்தால் நிலைத்த
கடுந்தவம் செய்தாய் நீ
காந்தியநாட்டையே கலங்கவைத்தாய்
காலம் உள்ளவரை
வாழும் உனது கொடை…..
