0
0
Read Time:1 Minute, 3 Second
யாழ் நகரை ஊடறுத்து செல்லும் பிரதான வெள்ள வாய்க்காலை ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பின்னர் தூர்வாரும் பெரும் முயற்சிக்கான முன் ஆயத்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனை நானும் வரதராஜன் பார்த்தீபனும் நேரில் சென்று பார்வையிட்டோம்.
இம்முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தால் யாழ் நகரில் ஏற்பட கூடிய வெள்ள பாதிப்புகள் இல்லாது போகும் என்று நம்புகின்றேன். இப்பணியானது உயிர் அபாயம் மிக்க பணியாகும். இத் துப்பரவு பணிகள் சில நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதனால் ஏற்படக் கூடிய அசௌகரியங்களை பொறுத்தருளுமாறு மக்களிடம் வினயமாக வேண்டுகின்றேன்.
நன்றி.”