பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போரட்டம் இன்று இரண்டாம் நாளை மட்டக்களப்பு- தாளங்குடாவில் ஆரம்பித்து மட்டக்களப்பு நகருக்குள் சென்று பின்னர் ஓட்டமாவடி வாகரை ஊடாக திருகோணமலை நகரை சென்றடைந்துள்ளது.
படையினரின் இடையூறுகள் மற்றும் மக்களின் பேராதரவு போன்ற காரணங்களால் திட்டமிட்டபடி பேரணியானது முல்லைத்தீவினை சென்றடைய முடியவில்லை எனவும் 6ம் திகதி நிறைவடைய இருந்த இந்த போராட்டம் 7ம் திகதி நிறைவடையும் என சிவில் அமைப்புக்களின் சார்பில் சுவாமி ஜகர சைத்தண்யா திருமலையில் வைத்து தகவல் வெளியிட்டுள்ளார்.
அங்கு கருத்து தெரிவித்த சுவாமி அவர்கள் இது மக்களின் உரிமைக்கான போராட்டம் இதனை தனிநபர் புகழுக்காகவோ தனிப்பட்ட நபரின் அல்லது கட்சிசார் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும் இது போன்ற சில நடைமுறைகள் இரண்டாம் நாளில் இடம்பெற்றதாகவும் இதனை தவிர்த்து மக்களின் உரிமைக்கான போராட்டத்தை உரியவாறு நடார்த்த அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு உரிமையோடு கேட்டுக்கொண்டுள்ளார்.