முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 25 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு சுவிஸ் ஆர்கவ் மாநிலத்தில் 19.09.2021 அன்று முன்னாள் போராளி சுஜீபன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் முதல் நிகழ்வாக பொதுச்சுடர், பொதுச்சுடரினை நெதர்லாந்து நாட்டில் இருந்து வருகை தந்திருந்த சந்துரு அவர்களும் முன்னாள் போராளி தமிழ்மாறன் அவர்களும் சுவிஸ் தமிழ் காவலர் துணைப் பொறுப்பாளர் சுதா மற்றும் முன்னாள் போராளி எழிலினி அகியோர் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை மட்டக்களப்பு மாவட்டத் தாக்குதல் தளபதிகளில் ஒருவரான மாவீரர் கேணல் நாகேஸ் அவர்களின் துணைவி திருமதி கெங்கா அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து பொது மாவீரர் திருவுருவப் படத்திற்கான ஈகைச் சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு ரகுபதி அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்ட 25 மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு அவர்களது சகோதரர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்தார்கள்.
தொடர்ந்து மலர் வணக்கம் நடைபெற்றது. மலர் வணக்கத்தினை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை நிர்வாக பொறுப்பாளர் நசிர் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்றது.
தலைமையுரையினைத் தொடர்ந்து நினைவுரையினை முன்னாள் போராளி செம்பருதி அவர்களும் தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் ரகுபதி அவர்களும் ஆற்றினார்கள். தொடர்ந்து சிறப்புரையினை தமிழீழ விடுதலைப்புலிகளின் விடுதலைப்புலி பத்திரிக்கை ஆசிரியர் சு.ரவி அவர்கள் ஆற்றினார்.
தொடர்ந்து மாவீரர்களின் உறவினர்களுக்கான தமிழீழத் தேசியக்கொடிப் பேழையினை மாவீரர் கெங்கா அவர்களின் சகோதரர் சதீஸ்குமார் மற்றும் நந்தகுமார், சிவகுமார் ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர்.
இந்த நிகழ்வினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை மற்றும் போராளிகள் கட்டமைப்பு ஆகியோர் இணைந்து நடாத்தி இருந்தனர். இந் நிகழ்வில் சுவிஸ் மற்றும் ஐரோப்பாவில் இருந்தும் முன்னாள் போராளிகள் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.