யாழ். மாவட்ட கட்டுவன் பகுதியில் 20.05.1987 அன்று சிறிலங்கப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியுமான லெப். கேணல் ராதா அவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
மேலும்மறக்கவும்,மன்னிக்கவும் முடியாத நாள்……18.05.2009
16வருடங்களுக்கு முன் இதே நாளில் முள்ளி வாய்காலில் நடந்தது ஓர் பேரவலம்.கேட்பதற்கு இவுலகில் யாரும் அற்றவர்களாய் அழிக்கப்பட்டது தமிழினம்.கண்முன்னால் நடந்த அந்த பேரவலங்களை மறக்க முடியாமல் மனம் குமுறுகிறது .
மேலும்நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 2025 – சுவிஸ்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும்திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 10.05.2025 சனி அன்று துர்க்காவ் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
மேலும்இராணுவ புலனாய்வாளர்கள் என சந்தேகிக்கப்படும் சிலரால் சிவில் சமூக செயல்பாட்டாளர் செல்வகுமார் தாக்கப்பட்டார்.
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட் டாளர் செல்வகுமார் வழி மறிக்கப்பட்டு இனந் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார்.
மேலும்கவனயீர்ப்பு நடைப்பயணம்
தமிழின அழிப்பு நினைவு நாள் 2025.சுவிஸ்
ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுநாள்.16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்..!
மேலும்முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நாள் நினைவு வணக்கப்பூசையும், சுடர் வணக்கமும்.
பிரான்சில் Noisy-le-Sec நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வு!
பிரான்சில் நுவாசிலுசெக் ( Noisy-le-Sec ) நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று 10.05.2025 சனிக்கிழமை பிற்பகல் 16.00 மணிக்கு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நுவாசிலுசெக் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மேலும்பிரான்சில் லெப். கேணல் நாதன் கப்டன் கயன் அரசறிவியற் கல்லூரி ஆரம்பமும் செயலமர்வும்!
லெப். கேணல் . நாதன் கப்டன் கயன் அரசறிவியற் கல்லூரி ஆரம்பமும், செயலமர்வும் கடந்த (08.05.2025 ஞாயிற்றுக்கிழமை பாரிசு புறநகர் பகுதியில் ஒன்றான சென்டெனியில் இடம்பெற்றது.
மேலும்பதின்நான்காம் பாப்பரசர் அருட்திரு. லியோ ஆற்றிய முதலாவது (08.05.2025) உரை
உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் சமாதானம் உண்டாக! அன்புடைய சகோதரர், சகோதரிகளே, இது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் முதல் வாழ்த்து. நன்மைமிக்க மேய்ப்பன் அவர் தம் கூட்டத்துக்காக தம் உயிரை கொடுத்தவர்.
மேலும்