பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 18ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!

சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் – பொதுக்கூட்டம் 2 NOVEMBER 2025

ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் – பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் அழைப்பு அன்புடைய ஈழத் தமிழர் திரைப்படக் குடும்பத்தினருக்கும்,சினிமா ஆர்வலர்களுக்கும்,வணக்கம் 

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற லெப்.கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவக ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.10.2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் இம் மாவீரர்களின் கல்லறை அமைந்துள்ள பிரான்சு பந்தன் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.

மேலும்

செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்ட 34ஆம் ஆண்டு

செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் மலர்ச்சோலைதான். ஏனெனில் சின்னப்பூக்கள் பலவற்றின் பெரிய வீடு அது. கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்கள் வாழும் இல்லம்.

மேலும்

எல்லாளன் நடவடிக்கையில் காவியமான 21கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்!

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.

மேலும்

நூல் வெளியீடு.

தமிழீழ விடுதலைப் போர்க் களங்களில், சிங்களப் படையின் அதி உச்ச படைத்தளங்களுக்குள் இறங்கி, தமிழீழ விடுதலையின் தடைகளை உடைத்தெறிந்த, நெருப்புக் குழைந்தைகளான கரும்புலிகளின் வீர வரலாற்றிணையும், அவர்களின் வாழ்வியலின் உண்மைக் கதைகளையும் தாங்கித் தொடராக வெளிவரும் “தடைகள் தகரும் தமிழீழம் மலரும்.”எனும் நூலின் பாகம் மூன்று. எதிர் வரும் 26.10.2025 அன்று,பிற்பகல்.15,00 மணிக்கு.பிரான்சு நாட்டின் SALLE DE RECEPTION GOLDEN HOUSE 195 ROUTE SAINT LEU,93800 EPINAY SUR SEINE என்ற இடத்தில் வெகு சிறப்பாக வெளியீடு செய்ய இருப்பதால், இந்த வரலாற்று நூலின் வெளியீட்டுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும்