பல்வேறு களப்பணிகளில் பங்காற்றிய மாவீரன் லெப். கேணல் மாறன் / குன்றத்தேவன்

1999ம் ஆண்டு வன்னி மீதான இலங்கைப் படையினரின் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலால் இயக்கத்தில் இணைந்தவர்களில் ஒருவன் மாறன். தனது அடிப்படை பயிற்சியை மாறன் 10ல் முடித்தவன். அப்பயிற்சி முகாமிலிருந்து ஒரு தொகைப் போராளிகள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது இங்கு வந்து கடற்புலிகளுக்கான பயிற்சியை முடித்து, மணலாற்றுக் களமுனைக்குச் சென்றான்.

மேலும்

லெப் கேணல் அண்ணாச்சி அவர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

1990 களில் இடம்பெற்ற முப்படைகளின் மக்கள் மீதான கொடுரத் தாக்குதலின் விளைவாக போராடப் புறப்பட்டவர்களில் ஒருவனாக புறப்பட்ட சிறி பயிற்சி முடிவடைந்தவுடன் கடற்புறாவிற்க்கு சிலபோராளிகள் உள்வாங்கப்பட்டபோது சிறியும். ஒருவனாக வந்தான்.இங்கு வந்தவன் ஆர்.பி.ஐி பயிற்சி எடுத்து ஆகாய கடல் வெளிச் சமரில் பங்கு பற்றி தனது முதலாவது சமரும் நீண்ட நாட்கள் தொடர்ந்த சமரில் சளைக்காமல் போரிட்டான்.

மேலும்

தேசியத் தலைவருக்கு திருமணநாள் வாழ்த்துகளும் இந்நாளில் மலர்ந்த மகன் பாலச்சந்திரனுக்கு இனிய அகவைநாள் வாழ்த்துகளும்..!

அன்புக் குழந்தையேபாலச்சந்திராநீ மலர்ந்த நாள் இன்று!

மேலும்

பிரான்சு நெவெர் நகரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல்!

பிரான்சின் புறநகர்ப் பகுதியான நெவெர் நகரில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேலும்

யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கை. காவியமான 80 மாவீரர்களி​ன்28ம் ஆண்டு நினைவு.

மண்கிண்டிமலை முகாம் தகர்ப்பின் பின் மணலாற்றில் நின்ற யாழ்மாவட்ட தாக்குதலணியைச் சந்தித்த அப்போதைய விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதி பால்ராஜ் அவர்கள் (1992ம் ஆண்டு மாவீரர் நாளன்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் அணிவகுப்பு மரியாதையை முதன் முறையாக விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதியாக ஏற்றார் .

மேலும்

இன்றைய நிகழ்வில் அன்றைய நிகழ்வு

சிறிலங்காவின் ஊவாமாகாணத்தில் உள்ள புத்தள எனும் கிராமத்தில் நடைபெற்ற கம் உதாவா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சிறிலங்க ஜனாதிபதி பிரேமதாஸ அங்கேயே தனது 68 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. மோதிலால் நேரு அங்கு சென்று திரு. பிரேமதாஸவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின்
நினைவெழுச்சி நாள்!

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவைத்; தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், 26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாளானது 26.09.2021 ஞாயிறு அன்று பேர்ண்; மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடனும், சிறப்பாகவும் கடைப்பிடிக்கப்பட்டது.

மேலும்

பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் மழைக்கு மத்தியில் எழுச்சியடைந்த தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலும் இன்று (26.09.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மழைக்கு மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

மேலும்

தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் காலமானார்.

தமிழீழ மக்களின் நினைவுகளில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள மாவீரர் துயிலும் இல்லப் பாடலான “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! “என்ற பாடலைப்பாடிய சங்கீத,மிருதங்க கலாவித்தகர் இசைக்கலாமணி வர்ண ராமேஸ்வரன் அவர்கள், 25ம் திகதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கனடாவில் காலமானார்.

மேலும்

ஈகத்தீயேவா எம்மில் எழுச்சிமின்னல்தா

புரட்சியியைப் புரட்சித்த அகராதியேபுன்னகையால் செயல்வென்ற பெரு மேதையேமக்களுக்காய் முழங்கிநின்றஅன்பாளனே

மேலும்