தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகள் 74 ஆண்டு காலமாக தவறான அரசியலை நடத்தி முடித்தது போதும். இனி ஆவது தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று அதன்படி முடிவுகளை எடுங்கள்.
அல்லது உங்களுக்கும் நாளை ‘கோத்தபாய கோ கோ’ என்று சிங்கள மக்கள் இன்று சொல்லுவது போன்ற நிலைமை உருவாகும். தமிழ் அரசியல்வாதிகளும் தங்களுடைய பதவிகளை விட்டு சொந்த வீட்டுக்குப் போங்கள் என்ற கோசம் விரைவில் எழும்புவதற்குத் தயராகக் காத்திருக்கிறது. இதை மறந்து விடாமல், திண்ணையில் குந்துவதையும் US ஹோட்டலில் குத்துவதையும் நிறுத்தி தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுங்கள். அல்லது நீங்களாக பதவியை துறந்து வெளியேறுங்கள்! வருங்கால இளைஞர்கள் எது தேவையோ அதைச் சரியாகக் கையில் எடுப்பார்கள். இல்லையென்றால் விரைவில் ஸ்ரீலங்காவின் கைக்கூலி அருண் சித்தார்த்துக்கு நடந்தது தான் உங்களுக்கும் நடக்கும்! அதுதான் மக்கள் ஜனநாயகம்!! வரலாறு சொல்லும் பாடம்!
மனித உரிமை செயல்பாட்டாளர்
ம. கஜன்