பிரித்தானியாவில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இலங்கையர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இளம் தாய், அவரது 4,1 வயதான பிள்ளைகள், பாட்டி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடொன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
வீடு தீப்பற்றியதும், இளம் தாய், தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு, ‘நெருப்பு… நெருப்பு’ என கதறியுள்ளார்.
தீயணைப்பு படையினர் பகீரத பிரயத்தனப்பட்ட போதும், வீட்டிலிருந்த 4 பேரை காப்பாற்ற முடியவில்லை. உயிரழந்த இளம் தாயின் சகோதரன், மேல் மாடியிலிருந்து குதித்து தப்பித்தார். அவர் கால்கள் உடைந்துள்ளன.
தனது மனைவி, 4,1 வயதுடைய பிள்ளைகள், மாமியாரை பறிகொடுத்த கணவன், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகளை பிரித்தானிய ஊடகங்கள் ஒளிபரப்பின.
உயிர் தப்பிய கணவன் யோகன் என அழைக்கப்படுகிறார்.
சுமார் 3 மாதங்களின் முன்னர்தான் 425,000 பவுண்டுகளிற்கு அந்த வீட்டை அவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில், யோகன் பணியிலிருந்த போது, அவரது மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிகவும் பீதியடைந்த குரலில் அவர், ‘நெருப்பு… நெருப்பு’ என கத்தியுள்ளார். அத்துடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அவரது மனைவியின் தாயார் இன்று இலங்கைக்கு திரும்பவிருந்தார். இதற்காக மாடியில், அவரது பயண பொதிகளை கட்டிக் கொண்டிருந்த போது, இந்த தீ விபத்து நேர்ந்துள்ளது.
குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கருகிய வீட்டிற்கு வெளியில் இன்று கண்ணீருடன் கூடியிருந்தனர். அந்த பகுதி மக்களும் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
நேற்று பெக்ஸ்லி ஹீத்தில் நடந்த தீ விபத்திற்கு காரணம் கார்த்திகை தீபம் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கீழ் உள்ள படிகளில், நிரூபா என்ற இந்த 2 பிள்ளைகளின் தாயாரும். நிருபாவின் அம்மா( சமீபத்தில் இலங்கையில் இருந்து பிள்ளைப் பெத்தை பார்க்க வந்தவர்) இணைந்து தீபங்களை ஏற்றி வைத்துள்ளார்கள். அதில் இருந்து பரவிய தீ காரணமாக அவர்களால் கீழே செல்ல முடியவில்லை. தப்பிக்க வேறு வழிகளும் இருக்கவில்லை. ஜன்னல் வழியாக குதித்தும் இருக்க முடியும். ஏன் எனில் நிருபாவின் கணவரின் தம்பி உள்ளே உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அவர் நெருப்பின் புகை காரணமாக எழுந்து, ஜன்னல் வழியாக குதித்து தப்பியுள்ளார். ஆனால் கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் இருப்பதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. தமிழர்களே இதில் இருந்து பல பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது…
நேற்றைய தினம் லண்டனில் எத்தனை பேர் உங்கள் வீடுகளில் கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தீர்கள் ? அது சற்று தவறி இருந்தால் உங்கள் வீட்டிலும் இதே நிலை தான் தோன்றி இருக்கும் என்பதனை எவரும் மறக்க வேண்டாம். எமது சாத்திர சம்பிரதாயங்கள் மிக மிக முக்கியம் தான். கார்த்திகை தீபம், முதல் கொண்டு பொங்கல் வரை நாம் கொண்டாடுகிறோம். ஆனால் நாம் இருப்பது வெளிநாட்டில். எனவே அதற்கு தகுந்தால் போல வாழப் பழகிக் கொள்ளுதல் நல்லது. கார்த்திகை தீபத்தை வீட்டின் முன் வாசலில் வைக்க முடியும். அதுவும் நிலத்தில் வைத்தால் அதனால் வீட்டுக்கு ஒன்றும் நடக்காது. மேலும் சொல்லப் போனால் இப்படியான சில விபத்துகளுக்கு இன்சூரன்ஸ் கூட கவர் பண்ணாது. ஏன் என்றால் நீங்கள் தான் வீட்டை எரித்தீர்கள் என்று கூறுவார்கள்.
வீட்டில் ஊது பத்தி கொழுத்தி வைத்து, அதில் தீ பிடித்து ஒரு தமிழ் குடும்பத்தில் சிலர் இறந்த சம்பவம் உங்களில் பலருக்கு நினைவு இருக்கலாம். இன்று இளம் குடும்பப் பெண் நிரூபா, அவரது பெண் குழந்தை ஷசனா மற்றும் மகன் தபிஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்துள்ளார்கள். இது போக பிள்ளைப் பெற்றை பார்க்க வந்த நிரூபாவின் தாயாரும் இறந்து விட்டார். குடும்பத்தாரை இழந்து தவிக்கும் யோகன் தங்க வடிவேல் அவர்கள், தீராத துயரில் உள்ளார். அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை நாம் தெரிவித்துக் கொள்வோமாக. தமிழர்களே வீட்டில் ஊது பத்தி ஏற்றுவது, சாமி அறையில் விளக்கு ஏற்றுவது மற்றும் கார்த்திகை தீபம் ஏற்றுவது, என்பது எல்லாம் மிக மிக ஆபத்தான விடையம். அதனை எவ்வாறு பாதுகாப்பாகச் செய்வது என்று பாருங்கள்.
தயவு செய்தி இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிருங்கள். ஒரு விழிப்புணர்வை இனியாவது கொண்டு வருவோம்.