Read Time:1 Minute, 0 Second
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் பிரதேசத்தின் குமுழமுனைப் பகுதியில் நான்கு மாத ஆண் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பால் புரைக்கேறியதால் குழந்தை சிரமப்பட்டதை அடுத்து முழங்காவில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து முழங்காவில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.