சாதனைகளையும்…சரித்திரங்களையும்…துன்பங்களையும்…துயரங்களையும்…தாங்கிக்கொண்டஒரு மண்ணின் பெயர் —ஆனந்தபுரம்.
மேலும்Day: April 3, 2026
விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.
மேலும்வீரத்தின் விளைநிலம் – எங்கள்இனத்தின் அடையாளம்கேணல் தமிழ்ச்செல்வி
“அம்மா….நீங்க செய்தது கொஞ்சம் கூட சரியில்ல….எனக்குச் சுத்தமாப் பிடிக்கேல்லையம்மா… எப்படியம்மா உங்களுக்கு மனசுவந்திச்சு…. அதுவும் உங்கட சொந்த தங்கச்சிக்கு ஒரு பச்சை மண் குழந்தை இருந்திருக்கு நீங்க அதப்பற்றி ஒரு நாள் கூடசொல்லவே இல்லையம்மா… ஏனம்மா… உங்களுக்கு உங்கட தங்கச்சி மேல கொஞ்சம்கூட பாசம் இல்லையாம்மா…, தமிழ்ச்செல்வி வீரச்சாவு அடைந்த பிறகு அவான்ர குழந்தையை நீங்களும் கைவிட்டுட்டுவந்திட்டீங்களேயம்மா… அந்தப்பிள்ளஎன்னம்மா செய்திருக்கும்… ஏனம்மா நீங்க இவ்வளவு நாளும் அந்தப்பிள்ளையைத்தேடேல்ல… ஆனா நான் மட்டும் உங்களமாதிரி இருக்க மாட்டன். என்ர அண்ணாச்சிக்கு ஏதுமெண்டா என்ர உயிரைக் கொடுத்தாவது அவனக் காப்பாற்றியிருப்பன்… ஆனா…., நீங்க அப்படியில்லையே..அம்மா… உங்கட தங்கச்சியின்ர கைக்குழந்தையைக்கூட விட்டிட்டு வந்திட்டீங்களே… எனக்கு கவலையா இருக்கம்மா…. உங்களில கோபம் கோபமா வருகுதம்மா….”அவள் படபடத்தாள்.
மேலும்குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.
அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.
மேலும்