கார்த்திகை போர்த்திடக் கருமுகில்நேர்த்தியாய்ப் பொழிந்திடும்வேர்த்திடும் வேர்களில் வீரமும் சேர்ந்தே முளைவிடும்-புகைபோர்த்திய எரிமலைக்குளம்புகள்ஆர்த்து வெடித்திடும்-மனக்கூட்டினுள் வெப்பம் குமுறிக்கொப்பளித்து வெளிவரும்பாட்டுக்கள் ஆயிரம் மாவீரப் பண்களாய்ப் பிறக்கும்ஆண்ட நம் தமிழீழத்திசைகள்அமைதியாய்த்துடிக்கும்-கடல்தாண்டியே தவிப்புடன் தமிழீழத்தாகம் தகிக்கும்மாண்டவர் கல்லறைக்கோவில்கள்மலர்க்கதவு திறக்கும்மலரட்டும் மண்மடி என்றேமாவீரம் சிலிர்க்கும்-நல்வாழ்வொன்றைக்காணத் தலைவனின்வழிசென்ற வீரர்சாதனை வென்று எழுதியசரித்திரக் காலமிது
மேலும்