Read Time:33 Second
தமிழீழ இறைமைகாக்க
தன்னைஔடதமாக்கினன்
புற்றென எம்தேசத்தில் புகுந்த தீயோரை- தலை சுற்றித்தடுமாறவைத்தனன்.
தான் கற்றவைத்தியத்தைத் தள்ளிவைத்து
தானே மருந்தாகினன்
தமிழ்மண்ணுக்கு.
அகம்புறம் நுழைந்த அந்நியரின்
ஆட்டம் அடங்க
ஔடதமாயினன் அழித்தனன் அடக்குமுறைநோய் …
அண்ணா திலீபா மருத்துவம் கற்றனை மருந்தே ஆகினையோ…
