மே18- தமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2022

ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுநாள்; மறக்க மடியாத சோகமாக, மாறா வடுவாக மாறிய தமிழீழத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்குமான 13ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்…!!

மேலும்

விடுதலைப் போராட்டத்தை வீறுகொண்டு தொடர்வோம்!காசி ஆனந்தன் சூளுரை

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து ஈழத் தமிழர்களும் மிகப்பெரிய அளவில் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.‘அடிமை வாழ்வு’க்கும் ‘வறுமை வாழ்வு’க்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப்புரிந்து கொண்டு தமிழர்கள் இச்சிக்கலை அணுக வேண்டும்.

மேலும்

நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பது, ஒற்றையாட்சி முறைமை ஒழிப்பது, தமிழ்த் தேசமும்இ சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்ட்டி (கூட்டாட்சி) முறைமையை ஏற்படுத்துவதுமே நெருக்கடியிலிருந்து நிரந்தரமாக மீண்டெழ ஒரே வழி – கஜேந்திரகுமார் எம்பி

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது மட்டுமல்ல, 74 வருட ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்படல் வேண்டும். தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்ட்டி (கூட்டாட்சி) முறைமையை ஏற்படுத்துவதற்கு நீங்கள் இணங்கவேண்டும். இதுவே இன்றைய நெருக்கடியிலிருந்து நிரந்தரமாக மீண்டெழ ஒரே வழி – கஜேந்திரகுமார் எம்பி

மேலும்

விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

மேலும்

குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.

மேலும்

தமிழ் இனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்…!

இனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்10.10.87 இந்தியப் படைகள் புலிகள் மீது திடீரெனப் போர் தொடுத்த நாள். இத்திடீர்ப் போர்ப் பிரகடனத்திற்கு உடனடிக் காரணங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைதான்.

மேலும்

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன்

எம்ஜிஆர் என்கிற ஒரு ஆளுமை உலக புகழ் பெற்றிருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவருடைய அரசியல் உலக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அதில் மக்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட விடயம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை அவர் கையாண்ட விதம். எமக்கு என்ன தேவை என்பதை முழுமையாக உணர்ந்து இருந்தார். அது ஈழ மக்கள் மத்தியிலும், உலக தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய வரவேற்பினை பெற்று தந்தது எம்ஜியார் அவர்களுக்கு……

மேலும்

சுவிசில் மீண்டும் தளர்வு

பெருந்தொற்றுப் பேரிடாராக சுவிற்சர்லாந்து அரசால் நோக்கப்பட்டிருந்த மகுடநுண்ணிப் பெருந்தொற்று தற்போது சுவிஸ் அரசால் தொற்றுநோயாக மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் பொருளை சுக் மாநில அரச அதிபர் தெரிவித்த உவமையுடன் பார்த்தால், ஆம், மகுடநுண்ணி இன்னும் உலகில் முற்றும் முழுதாக ஒழியவில்லை, அப்படி ஒழியாதும் போகலாம், ஆனால் சுவிற்சர்லாந்து நலவாழ்வு நிறுவனங்களால், மருத்துவமனைகளால் இத்தொற்றுக்குள்ளானவர்களுக்கு மருத்துவம் அளிக்கமுடியும், தடுப்பூசி இடப்பட்ட பயன் இந்நோய்த்தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருக்கும், ஆகவே பேரிடர் பெருந்தொற்றிலிருந்து மகுடநுண்ணி (கோவிட்-19) தொற்றுநோயாக மட்டும் பார்க்கப்படும்.  

மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தாய்மார்கள் பொலீசாரால் தாக்கப்பட்டமையை கண்டித்து நடைபெறவுள்ள போராட்டத்திற்குக் அனைவரும் அணிதிரள வேண்டும்.

சிறிலங்காவின் ஆயுதப்படைகளாலும் துணை இராணுவக் குழுக்களலும் பல ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.குறிப்பாக 2009 மே மாதம் இனவழிப்பு யுத்தத்தின் முடிவில் – சிறிலங்கா ஆயுதப்படைகளிடம் சரணடைந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

மேலும்