Read Time:1 Minute, 0 Second
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 35 வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வருகின்ற 3,4,5/03/2022 ஆகிய திகதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை திருநெல்வேலி சந்தியிலிருந்து ஆடியபாதம் வீதி புகையிரதக்கடவை சந்தி மற்றும் பரமேஸ்வரா சந்தியிலிருந்து இராமநாதன் வீதி கலட்டி சந்திவரையும் ஒரு வழிப்பாதையாக மாற்றுவதுடன் அவ் வீதி வழியாக பயணிக்க இருப்போர் குறித்த நேரத்தில் பொருத்தமான மாற்று வழியை தெரிவு செய்யுமாறும் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் இணைந்து கேட்டுக் கொள்கின்றனர்.


நன்றி.
