யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியின் அகலிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று யாழ்.பொதுச நூலகத்தில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
மேலும்Day: March 2, 2022
யாழ்,பல்கலைக்கழக 35 வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 35 வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வருகின்ற 3,4,5/03/2022 ஆகிய திகதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை திருநெல்வேலி சந்தியிலிருந்து ஆடியபாதம் வீதி புகையிரதக்கடவை சந்தி மற்றும் பரமேஸ்வரா சந்தியிலிருந்து இராமநாதன் வீதி கலட்டி சந்திவரையும் ஒரு வழிப்பாதையாக மாற்றுவதுடன் அவ் வீதி வழியாக பயணிக்க இருப்போர் குறித்த நேரத்தில் பொருத்தமான மாற்று வழியை தெரிவு செய்யுமாறும் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் இணைந்து கேட்டுக் கொள்கின்றனர்.
மேலும்தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 15ம் நாளாக (01/03/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.
(01/03/2022) Benfeld, France மாநகரசபையின் முன்றலில் இருந்து தொடர்ந்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டம் Selestat , Issenheim மாநகரசபைகளில் சந்தித்து மனுக்கொடுத்து தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே நிரந்தர தீர்வு என வலியுறுத்தப்பட்டது. மேடுகளில் தொலை தூரம் கடந்து வந்து சந்திப்பிற்கு திட்டமிட்ட நேரத்தில் சமூகமளிக்கமுடியாத நிலைஏற்பட்ட போதும் மாநகர சபை முதல்வர், உதவி முதவல்வர்கள் மேலும் உறுப்பினர்கள் காத்திருந்து மனித நேய செயற்பாட்டாளர்களை இன்முகத்தோடு வரவேற்று கலந்துரையாடினர்.
மேலும்