காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம்.

வெளிநாட்டு அமைச்சர் பீரஸ் அதன் கனதியை நீர்த்துப்போகச் செய்யவே எண்ணிக்கையைக் குறைக்கும் விசமத் திட்டத்தில் ஈடுபடுகிறார். இதை மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஆமோதிப்பதா? கூடாது என பச்சலற் அம்மையாருக்குக் காட்டமான திறந்த மடல்

மேலும்

மரண அறிவித்தல்

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரம் வீரபத்திரர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா பரராஜசிங்கம் அவர்கள் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும்

பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபத்தின் 2 ஆம் நாள் நிகழ்வுகள்!

பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று 16.09.2021 வியாழக்கிழமை உணர்வோடு இடம்பெற்றன.

மேலும்

16.09.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் இரு டோறாப்படகு மூழ்கடிப்புச் சமர் பற்றிய விபரம்.

இலங்கை அரசபடைகளின் தொலைத்தொடர்பாளரை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் கடற்புலிகளின் மகளீரணியினரால் பலமாதங்களாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒருதாக்குதற்திட்டம் தலைவர் அவர்களிடம் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் கொடுக்கப்பட்டது.

மேலும்

15ம் நாளாக (16/09/2021) தமிழீழ விடுதலைக்காக சுவிசு நாட்டில் வீறு கொண்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்.

தமிழீழ விடுதலை வேண்டி தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணா உண்ணா நோன்பினை நல்லைத்தெருவில் ஆரம்பித்த 2ம் நாளில் வீறு கொண்டு சுவிசு நாட்டில் மனித நேய ஈருருளிப்பயணம் தொடர்கின்றது. Liestal, Switzerland மாநகரசபை முன்றலில் இருந்து அரசியல் சந்திப்பின் ஊடாக இன்றைய பயணம் Solothurn மாநகரசபை நோக்கி விரைந்து தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் அவையினை எதிர்வரும் 20/09/2021 வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்

14ம் நாளாக (15/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது. (1048Km)

தமிழர்களின் தேசம் விடுதலை பெற நல்லூர் முன்றலில் 12 நாட்கள் அறவழியில் உண்ணா நோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபன் அண்ணா அவர்களின் முதலாவது விடுதலை வேள்வி நாளின் நினைவு சுமந்து இன்று 15/09/2021 காலை அகவணக்கத்தோடு மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பமானது.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்….!

இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

மேலும்

பிரான்சில் மழைக்கு மத்தியில் உணர்வோடு ஆரம்பமான தியாக தீபம் நினைவேந்தல்!

தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தினமாகிய இன்று 15.09.2021 புதன்கிழமை பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் மழைக்கு மத்தியில் உணர்வோடு ஆரம்பமாகின.

மேலும்

புலிகள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை – -கஜேந்திரகுமார் எம்பி

13-09-2021 திகதி ஆரம்பமாகியுள்ள ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பேசப்படும் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டினை விளக்கும் ஊடக மாநாடு இன்று ZOOM  செயலி ஊடாக இடம்பெற்றது.

மேலும்

ஜெனிவாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு மற்றும் தமிழின அழிப்பு ஆதாரநிழற்படக் காட்சிப்படுத்தல்.

செப்டெம்பர் முதலாம் திகதி பிரான்சுப் பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த நீதிக்கான பயணம் செப்டெம்பர் 11ஆம் திகதி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலை சென்றடைந்ததைத் தொடர்ந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை போன்றவற்றை நோக்கி கவனயீர்ப்பு மற்றும் தமிழின அழிப்பு ஆதார நிழற்படக் காட்சிப்படுத்தலை தொடர்ச்சியாக செய்துவருகின்றனர்.

மேலும்