Year: 2020
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்…!
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத் தொடங்கியிருந்தார்கள்.
மேலும்தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனிவா ஐ.நா.முன்றலில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அணிதிரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்.
பிற்பகல் 14:30 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் ஒருமணி நேரமாக தமிழ் உறவுகள் நீதி கேட்டு உரத்தகுரலில் உரிமைக்குரல்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
மேலும்திலீபனுடன் ஏழாம் நாள்
இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின……நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது.காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை.
மேலும்பிரான்சில் இடம்பெறவுள்ள தாயக வரலாற்றுத் திறனறிதல் 2020
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் மற்றும் தமிழீழத் தாயவள் அன்னை பூபதி ஆகியோரை நினைவுகூரும் தாயக வரலாற்றுத் திறனறிதல் 2020 எதிர்வரும் செப்டம்பர் 26 சனிக்கிழமை மற்றும் 27 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருதினங்களும் காலை 9.00 மணிமுதல் மாலை 17.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
மேலும்திலீபனுடன் ஆறாம் நாள்
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.
மேலும்தியாக தீபம் திலீபன் -ஐந்தாம் நாள் நினைவலைகள்
1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 19ம் திகதி இது திலீபனுடன் ஜந்தாம் நாள். வழக்கம் போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து நிறைய தொடங்கிவிட்டனர்.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்
கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை.
மேலும்