பிரான்சில் இடம்பெற்ற 17 மனிதநேயப் பணியாளர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0 0
Read Time:2 Minute, 35 Second

சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த (ACF) 17 மனித நேயப் பணியாளர்களின் 16 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு (04.08.2022) வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிச்சிப் பகுதியில் குறித்த பணியாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை
திரு கண்ணதாசன்
(பொருளாளர் தமிழ்ச்சங்கம் கிளிச்சி) அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை திருமதி சுபத்திரா ரவிச்சந்திரன்
(நிர்வாகி தமிழ்ச்சோலை கிளிச்சி) அவர்கள் ஏற்றிவைத்தார்.

மலர்வணக்கத்தை திரு பாலகுமாரன்
(அரசியல் துறை பொறுப்பாளர்) அவர்கள் செலுத்தியிருந்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

நினைவுரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் பாலசுந்தரம் ஆற்றியிருந்தார்.
குறித்த 17 பணியாளர்களின் படுகொலை தொடர்பில் நீதி கிடைக்கவேண்டும் என்பதாக அவரது உரை அமைந்திருந்தது.

நன்றியுரையினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் திரு. க.சச்சிதானந்தம் (சச்சி) அவர்கள் ஆற்றியிருந்தார்.

ஏனைய கட்டமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், கிளிச்சி தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது நினைவு வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு )

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment