இரண்டாவது நாளாகத் தொடரும்
ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணமும் நிழற்படக் காட்சிப்படுத்தலும்.

0 0
Read Time:1 Minute, 59 Second

தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 02/09/2021 அன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமானது. Collégien, Bally-Romainvilliers, Coutevroult, Coulommes, Montceaux-lès-Meaux, Ussy-sur-Marne, Montreuil-aux-Lions, Epieds, Ville-en-tradenois, Tinqueux ஆகிய நகரசபை முதல்வர்கள், துணை முதல்வர்கள், முதல்வர்களின் செயலாளர்களிடம் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. அனைத்து நகரசபைகளும் நீதிக்கான பயணத்திற்கு தங்களுடைய வாழ்த்துகளையும் விரைவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஊட்டினார்கள். தங்கள் ஆதரவு தமிழ் மக்களுக்கு எப்போதும் இருக்கும் என்ற உறுதியையும் வழங்கினார்கள்.

சில நகரசபை தமிழ் மக்களுடைய நீதிக்காக தங்களால் இயன்ற அளவு பணிகளை தமிழ் பண்பாட்டு வலையத்துடன் இணைந்து செயற்படுத்த தங்கள் விருப்பத்தையும் ஆர்வத்தையும் தெரிவித்திருந்தனர்.

நீதிக்கான பயணம் Château Thierry நகரை சென்றடைந்ததும், Château Thierry நகர்வாழ் தமிழர்கள், பயணிக்கும் செயற்பாட்டாளர்களை வரவேற்று தேனீர் சிற்றுண்டி வழங்கி போராட்டத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

இரண்டாவது நாள் ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணம் Tinqueux நகரசபையுடன் நிறைவு பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment