கடற்கரும்புலிகளினால் முதலாவதாக மூழ்கடிக்கப்பட்ட டோறாப்படகுத் தாக்குதல்

0 0
Read Time:5 Minute, 36 Second

1993 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினர், வடமராட்சிப்பகுதியில் கஸ்ரத்தின் மத்தியில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது சுட்டும் வெட்டியும் அவர்களின் படகுகளை மூழ்கடித்தும் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல்களை அதுவும் கரையிலிருந்து நான்கு கடல்மைல் தூரத்திற்குள் வந்து மேற்கொண்டிருந்தனர்.

இதனைக் கடற்புலிகள் தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். தலைவர் அவர்களோ எங்களிடம் அதற்கேற்ற ஆயுதம் இல்லை நீங்கள் அக் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்தி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களுக்கெதிராகப் பயன்படுத்தும்படியும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி அதற்கான பொறுப்பை தளபதி லெப் கேணல் சாள்ஸ் ( வீரச்சாவு 11.06.1993 ) அவர்களிடம் ஒப்படைத்தார். அதற்கமைவாக சாள்ஸ் அவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில் கிளாலி கடல்நீரேரியில் மக்கள் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையில் இலங்கைக் கடற்படையினருடனான நேரடிமோதலில் வீரச்சாவடைந்தார். தளபதி சாள்ஸ் அவர்களின் இழப்பிற்க்குப் பழிவாங்கும் முகமாக ஒரு தாக்குதலை நடாத்துவற்காக இச் சந்தர்ப்பத்தையும் கடற்புலிகள் ஆக்ரோசத்துடனும் அதேவேளை நிதானத்துடனும் செயற்பட்டனர்.அதற்கமைவாக கடற்கரும்புலிகளான மேஐர் புகழரசனும் கப்டன் மணியரசனும் தேர்வுசெய்யப்பட்டு அதற்கான பயிற்சிகள் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது .திட்டத்தின்படி மீனவர்களது படகைப்போல படகொன்றைக் கொள்வனவு செய்து அதற்குள் வெடிமருந்து நிரப்பப்பட்டு அதற்குமேல் வலைகள் போடப்பட்டு இவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவார்கள்.கடற்படையினர் இவர்களது படகை அனைத்து ஒருவரை தமது கடற்படைப்படகில் ஏறச்சொல்வார்கள் அச்சமயம் மணியரசன் ஏறமுற்பட புகழரசன் வெடிக்கவைப்பார். வெடிக்கவைத்தவுடன் இன்பருட்டிப் பகுதியில் நிலைகொண்டிருந்த சண்டைப்படகுகள் வேகமாகச் சென்று அவ்டோறாப்படகை கைப்பற்றுவார்கள் இதுவே திட்டமாக இருந்தது..29.08.1993 அன்று திட்டத்தின்படி பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்கரும்புலிகள் டோறாப்படகை மோதி வெடித்தனர்.சண்டைப்படகுகள் வேகமாகச் சென்று டோறாவைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.அந்தநேரத்தில் போதிய வசதியின்மையால் அம்முயற்சி பலனலிக்காமல் போக கடற்புலிகள் அவ்டோறாப்படகிலிருந்த ஆயுதங்கள் மற்றும் முக்கிய பொருட்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு அவ்டோறாவை மூழ்கடித்தார்கள்.இத்தாக்குதலுக்காக இக்கடற்கரும்புலிகள் பட்டகஸ்ரம் கொஞ்ச நஞ்சமல்ல ஒவ்வொருநாளும் இரவிலிருந்து மதியம் வரை வல்வெட்டித்துறையிலிருந்து மணற்காடுவரை இலக்கைத்தேடி ஓடுவார்கள் .பின்னர் இலக்குக்கிடைகாமல் திரும்புவார்கள் .இதுமாதக்கணக்கில் இடம்பெற்றது இருந்தாலும் இவர்கள் இலக்குக்கிடைக்கும் வரை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து இலக்கின் மீது தமது உயிராயுதத்தால் மோதி விடுதலைப்போராட்டத்திற்க்கு பலம் சேர்த்தார்கள்.இதுவே கடற்கரும்புலித்தாக்குதலில் முதலாவதாக மூழ்கடிக்கப்பட்ட டோறாப்படகாகும்.இவ்வெற்றிகத் தாக்குதலில்
கடற்கரும்புலி மேஐர்.புகழரசன்.
கடற்கரும்புலி கப்டன் மணியரசன்.
ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
இவ்வெற்றிகரத் தாக்குதலை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடாத்தினார்கள். தலைவர் அவர்கள் குறிப்பட்டபடி கடற்கரும்புலிகளின் உயிராயுதத்தால் மீட்கப்பட்ட ஆயூதங்கள் கடற்புலிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதுவும், அதன் பின் நடைபெற்ற கடற்சமரில் இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் முன்னனி ஆயுதங்களாக சண்டைகளின் திருப்புமுனையாக அமைந்தது என்று கூறினால் அதுமிகையாது.

எழுத்துருவாக்கம்..சு.குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment