மக்கள் சேவையை முன்னிறுத்தி செயல்பட்ட பாதர் சந்திரா அவர்களின் 33 வது ஆண்டு நினைவு நாள்

0 0
Read Time:11 Minute, 23 Second

ஈழத்தில் எமது விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப்பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. முப்பது வருடகாலவிடுதலைப் போராட்டத்தில் தன்னலம் கருதாது மக்கள்நலத்தில் செயல்பட்ட பல மகத்தான மனிதர்களை நாம்இழந்திருக்கின்றோம், இவர்களை இன்று நினைத்துப்பார்க்குமளவுக்கு இவர்களைப் போன்றவர்கள் இன்றுஇல்லாத நிலையே காரணமாகின்றன.

மட்டக்களப்பில்

என்று எல்லோராலும்அழைக்கப்பட்ட கிறிஸ்துவ துறவி அவர்களை நினைவுகூர்வதில் அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன்காணப்படுகின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாது, அனைத்து இனமக்களுக்கும் சேவை புரிந்த ஒரு நல்லஇதயங்கொண்ட மனிதரை ஏன் அன்று திட்டமிட்டுஅழித்தார்கள் என்பதை எமது இன்றைய தலைமுறையினர்அறிய வேண்டும் என்பது இந்த நினைவு கட்டுரையின்நோக்கமாகும்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கிபயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப்படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றிஅடைத்து வைத்தல், என பல்வேறு கோணத்தில் மக்களின்துன்ப, துயரங்களில், துணிந்து களமிறங்கி சேவை செய்தபாதர் சந்திரா அவர்கள் தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தையும் ஏற்றுக்கொண்டவராக காணப்பட்டார். அதனால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட மக்கள்அமைப்பு பலம்பொருந்தியதாகவும், பதில் சொல்லும்நிலையிலும் காணப்பட்டதற்கு பாதர் சந்திரா, வணசிங்காஅதிபர் ஆகியோர் உட்பட்ட தமிழ் நலன் வாதிகளின்செயல்பாடுகளே முன்னணியில் இருந்தன.

வரலாறு எம்மை உருவாக்கின்றது எமது வரலாற்றை நாமேஉருவாக்கின்றோம், எமது வரலாற்றை எமது எதிர்காலஇளைய தலைமுறையினர் அறிவதற்கு எமது காலத்தில், எமது செயல்பாடு நன்றாக, தூய்மையாக அமையவேண்டும்என்பது உயர்ந்த நோக்கமாகும்.

1983ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் 1988ம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டம் மக்கள் எழுச்சியுடன் உயர்ந்தஇலட்சியத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த வேளையில்சிங்களப் பேரினவாதிகளின் குறி தமிழ்மக்களை அழிப்பதாகஅமைந்திருந்தன. இக்கால இடைவெளியில் மட்டக்களப்புமக்கள் குழு மிகவும் பலம் பொருந்திய நியாயம் கேட்கும்நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், ராஜதந்திரிகள், உலகபொதுஅமைப்புக்கள் பிரதிநிதிகளைசந்தித்துஉண்மை நிலையை வெளிப்படுத்தும் அமைப்பாகச்செயல்பட்டதனால் எதிரிகளின் எண்ணங்களில்இடர்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன.

பாதர் சந்திரா அவர்கள் எந்த விடுதலை அமைப்பையும்சேர்ந்தவரில்லை, ஆனால் விடுதலைப் புலிகளின்போராட்டத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்தார். அக்காலத்தில் பல இயக்கங்கள் செயல்பட்ட போதும், இவருடைய சேவை மக்கள் நலன் சார்ந்ததாக மட்டுமேஇடம்பெற்றிருந்தன. மக்களுக்காக வாழ்ந்த மட்டக்களப்புமக்கள் குழுத்தலைவர். மக்கள் விரோதிகளால் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தமிழர்களுடைய உரிமைப்போராட்டத்தில் மன்னிக்க முடியாத நிகழ்வாகவும், மறக்கமுடியாத துயர சம்பவமாகவும் நடந்தேறியிருந்தன

வணக்கத்துக்குரிய பாதர் சந்திரா பெர்னாண்டோ அவர்கள்09.08.1948 அன்று மட்டக்களப்பு புளியந்தீவு என்னும் ஊரில்பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை சென் மேரிஸ்பள்ளிக்கூடத்திலும் உயர்கல்வியை புனித மிக்கல்கல்லூரியிலும் கற்றார் .

தனது குருக்கல்வியை இந்தியா மங்களூரிலும் , சென்னையிலும் பயின்று

  1. 21 நாள் அன்று குருப்பட்டத்தை மட்டக்களப்புமறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில்ஏற்றார் .

உதவித் பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர்தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதாதேவாலயத்திலும், திருகோணமலை மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவலையத்திலும்பணிபுரிந்து 1978ம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின்நிருவாகத்துக்கு நிதிப்பொறுப்பாளராக செயலாற்றினார்

1981ம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வரானார் இதேகாலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில்பங்குத்தந்தையாகவும் இருந்தார் . 1984ம் ஆண்டுமட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்றார் .

பாதர் சந்திரா அவர்களின் மக்கள் சார்ந்த பல நிகழ்வுகளில்இரு நிகழ்வை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் .19.1.1986 அன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியில் அமைந்திருந்தஇருதயபுரம் ஊர் சிங்கள விசேட அதிரடிப் படையினரால்அதிகாலைவேளையில் சுற்றிவளைக்கப்பட்டிருந்தன.ஊரில்வாழ்கின்ற மக்களுக்கு என்ன நடந்தது ? மக்களின் நிலைஎன்ன ? என்பதை எவராலும் அறிய முடியாமல் இருந்தவேளையில் பாதர் சந்திரா அவர்கள் தனது மோட்டார்சைக்கிலில் உயிரைவிட மக்களின் உண்மை நிலையைஅறிய வேண்டுமென்பதற்காக துணிந்து சிங்களஇராணுவத்தின் காவலையும் மீறி உள்ளே சென்றுமக்களுக்கு பக்கபலமாக நின்றார். இச்சுற்றுவளைப்பில்இருபதுக்கு மேற்பட்ட மக்கள் சிங்களஅதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் .

இன்னுமொரு நிகழ்வாக 1988ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணானசுகுணா, காத்தான்குடியைச் சேர்ந்த இஸ்லாமியக்பெண்ணான ரிபாயா ஆகிய இருவரையும் EPRLF குழுவினர்பிடித்து சென்று தங்களது வாவிக்கரை தங்குமிடத்தில்அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். இச்சம்பவத்தைஅறிந்த மக்கள் குழுத்தலைவர் பாதர் சந்திரா அவர்கள்இந்தியப் படை அதிகாரிகலுடன் தொடர்பு கொண்டுஇருவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டார். ஆனால்சுகுணாவை மாத்திரம்தான் மீட்க முடிந்தது. மற்றையபெண்ணான ரிபாயாவுக்கு என்ன நடந்தது என்பதை அன்றுஅறிய முடியவில்லை. இன்று வரையும் அறிய முடியவில்லை.

மட்டக்களப்பில் இரா. துரைரட்ணத்தால் கைது செய்யப்பட்டகாத்தான்குடியை சேர்ந்த றிபாயா என்ற இளம்பெண்பாலியல் வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டுப்புதைக்கப்பட்டார். வட,கிழக்கு மாகாண சபையின் தவிசாளர்ராம், ராஜகாரியர் இச்சம்பவம் தொடர்பாகப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபைஉறுப்பினராக இருக்கின்ற இரா. துரைரெட்ணம் என்பதைஉறுதிப்படுத்தபட்ட பின்பும் அவராலும் இதற்குரிய பதில்இன்று வரையும் வழங்கப்படவில்லை. பாதர் சந்திராஅவர்களும் தான் இருக்கும் வரை ரிபாயாவை மீட்பதற்கானமுயற்சியை மேற்கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு – அம்பாறையில் சிங்களப் பேரினவாதத்தால்திட்டமிட்டு இருதயபுரம், நற்பட்டிமுனை, உடும்பன்குளம், மண்முனை கொக்கொட்டிச்சோலை இறால் பண்ணை , மயிலந்தனை புணணை போன்ற இடங்களில் நடத்தப்பட்டதமிழினப் படுகொலைகளை வெளி உலகிற்குகொண்டுவருவதில் பாதர் சந்திரா அவர்களின் பங்குகுறிப்பிடத்தக்களவுயிருந்தன. இவ்வாறு மக்கள் நலன்பாதுகாப்பு என்பதில் தூய எண்ணத்துடன், செயல்பட்டதுறவியான இவர் இந்தியப்படையினர் எமது மண்ணில்நிலைகொண்டிருந்த வேளையில் பல இடையூறுகளைமக்கள் சேவையில் சந்தித்திருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டப்பாதையில் இலக்குத்தவறிய பயணத்தில் செயல்பட்ட இயக்கங்கள்பாதையிலிருந்து விலக்கப்பட்ட நிலையில், இந்தியப்படையினரின் பிரசன்னம் எமது மண்ணில்ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில்விடுதலைப்புலிகளையும் போராட்டத்தை ஆதரித்துநின்றமக்களையும் அழித்தொழிப்பதற்கு இந்தியபடையினருடன், தமிழ் இயக்கங்களான, EPRLF,TELO ,ENDLF போன்றவற்றின் உறுப்பினர்களும் துணைபோயினர்.

இந்நாளில் தங்களைத் தமிழ்த்தேசியவாதிகளாகக்காடடிநிற்கின்ற இரா.துரைரெட்ணம், , ஜனா போண்டவர்களின்தலைமையில் தமிழ்த்தேசவிரோதக் குழுக்கள் அந்நாளில்செயல்பட்டதை எவரும் மறுப்பதற்கில்லை, தமிழ்மக்களும்எளிதில் மறக்க மாட்டார்கள். இவர்களின்துரோகத்தனத்திற்கு அன்று இந்தியப் படையினர்துணைநின்றனர். இதற்கு பின்பு சிங்களப்படையினருக்கும்இவர்கள் துணைநின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment