0
0
Read Time:1 Minute, 8 Second
யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக
திருநெல்வேலி தேனு களஞ்சியம், கிசோத்,பகிர்,அனோஜன் மற்றும் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் ஆகியவர்களின் பொருள் மற்றும் நிதிப்பங்களிப்பில் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இன்றைய தினம் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களிடம் வந்த கோரிக்கைக்கு அமைவாக நாவாந்துறை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 24 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக இன்றைய தினம் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.