ஜேர்மன், சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 24தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். “சீகிரி” விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
ஜெர்மனிலிருந்து 20 பேரும் சுவிட்சர்லாந்திலிருந்துநான்கு பேருமே நாடு கடத்தப்பட்டகள்ஆவர்
அனுப்பப்பட்டவர்கள் 24பேருக்கும், ஒவ்வொருவருக்கும் காவல்துறையினர் இணைத்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இந்தக் குழு இன்று காலை 10.37 மணிக்கு ஜேர்மனின் டுசில்டோர்வ் விமான நிலையத்திலிருந்து வாமோஸ் ஏயர்லைன்ஸின் ஈபி – 308 என்ற சிறப்பு விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமான நிலையத்தை வந்தடைந்த அவர்கள்,தனிமைப்படுத்த நடவடிக்கைக்காக விமான நிலையத்தில் குடிவரவு மற்றும்குடிவரவுத் துறையினரால் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தனிமைப்படுத்தல் செயல்முறை முடிந்ததும்,அவர்கள் சி.ஐ.டி மற்றும் தேசிய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுகள்.
மொத்தமாக 120 பேர் விமானத்தில் பயணித்திருக்கிறார்கள், ஆனால் அனுப்பப்பட்டவர்கள் 126 தமிழர்கள் அல்ல. விமானத்திலிருந்தவர் தந்ததகவலைப் பதிவுசெய்திருந்தோம். அந்தத் தகவலுக்கு மன்னிப்புக்கோருகிறோம்.
கைதுசெய்யப்பட்ட மேலும் 80 நபர்களின் விபரங்கள் இன்னமும் தெரியவில்லை.