மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 33 ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும் , தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும்Struer நகரில் 10.10. 20அன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது .
தமிழீழப்பெண்கள் எழுச்சி நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. 2ம் லெப் .மாலதி, லெப்.கேணல் குமரப்பா , புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது . அதனை தொடர்ந்து மக்கள் சுடர், மலர்வணக்கம் மாவீரர்களுக்கு செலுத்தினார்கள். அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது .
மேடை நிகழ்வாக கவிதைகள் , பேச்சுகள், மாவீரர்களின் வீரத்தை உணர்த்தும் எழுச்சி கானங்கள் என்பன நடைபெற்றன.
நிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும் , தமிழர்களின் தாரகமந்திரத்துடன் “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகத்துடன்” நிகழ்வு நிறைவு பெற்றது.