0
0
Read Time:1 Minute, 21 Second
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய தலைவர்கள் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
முன்னணியின் பிரமுகர்களின் வீடுகளுக்கு இன்றிரவு சென்ற பொலிஸார் இது குறித்த நீதிமன்ற உத்தரவை அவர்களுக்கு வழங்கியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் உறுதிப்படுத்தினார்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வந்த அஞ்சலி நிகழ்வுகளின் எதிரொலியாக இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. நாளை நடைபெறவிருக்கும் இறுதிநாள் நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்ள முடியாத நிலை இதன்மூலம் ஏற்பட்டுள்ளது
தினக்குரலுக்கு