உள்ளத்தின்உரம் உரக்க
ஓர்மத்தை வரவழைக்க
எண்ணிய நற்செயல்சிறக்க
அண்ணனே மந்திரமாவான்
கண்ணியம் காவல்தாங்க
புண்ணியம் பொலிந்து தேங்க
பெண்ணினத்தின்
பெருமை ஓங்க
வண்ணங்கள் வாழ்வில்தங்க
அண்ணனே தந்திரம் சொன்னான்
தெள்ளிய அறிவுடையோன்
தெவிட்டாத அன்புடையோன்
வெள்ளமாய் வீரம்கொண்டோன்
விரிந்தவான் பார்வைகொண்டோன்
அரியவன் ஆசையற்றோன்
பெரியவன் பேறாய் வந்தோன்
உரிமையாய்த் தமிழை வளர்த்தோன்
உயிரது தமிழீழம் என்றோன்
உடல் பொருள்
அனைத்தும் ஈந்தோன்
உன்னதன் உண்மை மனிதன்
அவனியில் உயர்ந்தோன் அண்ணன்
தமிழரின் தலைவன் இறைவன்
வலியைத்தாங்கும் வலிமை தந்தோன்
வாழ்வை ஆக்கும் வழிகள் வரித்தோன்
கலிகள் களையும் கதியாய்த்தெரிந்தோன்
செயல்கள் வழியே ஒளியைப்பரப்பினன்
மனதில் உறுதி
மாண்பை நிரப்பினன்-தமிழ்
மண்ணின்விடுதலைப்பற்றை
விதைத்தனன்
நல்லன,வல்லன எல்லாம் தந்தனன்
குவலயம் வியக்கத்
தலைநிமிரச்செய்தனன்
ஆற்றல்நிறைகலைகளால் மாற்றம் நிகழ்த்த வைத்தனன்
வேள்வியன் எமை
ஆள்பவன்
எங்கள் வாழ்வவன்
அகம் நிறைந்த அண்ணனுக்கு
அகவை எழுபது வாழ்த்துகளை
அகம் கனிந்து அள்ளிச்சொரிகிறேன்.
கலைமகள்
26.11.2024
