Read Time:56 Second
படைப்பாளர் திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் எழுதிய நூல் “முட்காட்டுப் பூ “எதிர்வரும் 22.11.2025 சனிக்கிழமை மாலை 15.30 மணிமுதல் தமிழர் களறி மண்டபத்தில் வெளியீட்டு விழா நடைபெறும்.
ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை ஈழ மண்ணின் வாழ்வியலோடு இணைத்துத் தந்திருக்கும் படைப்பாளி ஆவார். காணாமல் ஆக்கப்பட்ட மகனை நினைத்து ஏங்கும் தாயின் உள்ளக்கனலை, பிள்ளையை இழந்த தாயின் உள்ளத்து உணர்வை எழுத்துக்களில் முட்காட்டுப் பூ நெடுங்கதையாக அளித்துள்ளார்.

