தலைமுறையின் விடுதலைக்காகத் தன்னையேஈந்த லெப்.கேணல் அன்பழகன்/விமலன்! 16வது ஆண்டு நினைவு 05,05. 2025

ஈழமணித் திருநாட்டின் வடமாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் வலிகாமம் கிழக்குப் பகுதியிலே செம்மண் கனிவளத்துடனும் தென்னந் தோப்புக்களும் பனை வெளிகளும் வேளாண் நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் கடல் வளங்களும் நிறைந்த எழில்மிகு ஊர் பலாலி ஆகும். இவ்வூரானது பல உழவர் பெருமக்கள், கல்விமான்கள், மக்கள் விடுதலை போராட்ட வீரர்களை பெற்றெடுத்து தன்னகத்தே கொண்ட மண் ஆகும்.

மேலும்

காலம் வனைந்த கலயங்கள்» நூல் அறிமுக விழா — வாசிப்பு மாலை

தாயகத்து எழுத்தாளர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் எழுதி, ஜீவநதி (இலங்கை) பதிப்பகம் வெளியிட்ட «காலம் வனைந்த கலயங்கள்» என்ற புதிய நூலின் அறிமுக விழா, 04.05.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு, பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோயில் மேல் மண்டபத்தில் அமைந்துள்ள தமிழர் களறி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவு கூரலும்..2025

சுவிசில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவு கூரலும்..

மேலும்

பிரான்சில் பல்லின மக்களோடு தமிழீழ தேசமக்களாக எழுச்சியடைந்த மேதினப் பேரணி!

பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 தொழிலாளர் நாள் பேரணி Place d’Italie (Paris) பகுதியில் இருந்து மதியம் 14.00 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழீழத் தேசியத்தலைவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியின் மத்தியில் தமிழீழக்கொடிகளைக் கைகளில் ஏந்திய தமிழீழ மக்களும் உணர்வாளர்களும் சிங்கள பெளத்த பேரினவாதம் தொடர்ந்தும் 76 ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் அனைத்து வழிகளிலும் மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பை வெளிப்படுத்திய படங்கள் மற்றும் பிரெஞ்சு மொழியிலான சுலோகங்களையும் தாங்கியவாறு பேரணியில் உணர்வோடு கலந்துகொண்டனர்.

மேலும்