சுவிசில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவு கூரலும்..
மேலும்Day: May 4, 2025
பிரான்சில் பல்லின மக்களோடு தமிழீழ தேசமக்களாக எழுச்சியடைந்த மேதினப் பேரணி!
பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 தொழிலாளர் நாள் பேரணி Place d’Italie (Paris) பகுதியில் இருந்து மதியம் 14.00 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழீழத் தேசியத்தலைவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியின் மத்தியில் தமிழீழக்கொடிகளைக் கைகளில் ஏந்திய தமிழீழ மக்களும் உணர்வாளர்களும் சிங்கள பெளத்த பேரினவாதம் தொடர்ந்தும் 76 ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் அனைத்து வழிகளிலும் மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பை வெளிப்படுத்திய படங்கள் மற்றும் பிரெஞ்சு மொழியிலான சுலோகங்களையும் தாங்கியவாறு பேரணியில் உணர்வோடு கலந்துகொண்டனர்.
மேலும்