இசையோடு வாழ்தல் தமிழரின் வாழ்வியல் மரபு. தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதில் இசையின் பங்கு உன்னதமானது. அந்தவகையில் மண்ணிலே விதையாகும் மாவீரக்கடவுளரை வணங்கி வழிபடுவதற்கென்று ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்று தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் எண்ணங்கொண்டார். அதன்படியே மாவீரர்துயிலுமில்லத்தில் வீரர்களை விதைக்கின்றபோதிலும், மாவீரர் நாளன்று ஊர்கூடி உறவுகள்கூடி மாவீரர்களுக்கு விளக்கேற்றும் அந்தப்பொழுதிலும் அப்பாடலை ஒலிபரப்பி இசையால் மாவீரர்களின் நினைவுகளை மீட்டி ,அவர்களை உளம் நிறைத்து உணர்வேற்றிக்கொள்ளும் பெருமைக்குரிய பாடல் பிறந்தது.
மேலும்