தியாக தீபம் திலீபனின் தியாகத்தைப் போற்றுவோம்!

15.09.2023அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!அகிம்சைவழிப் போராட்டமாகத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம்பல்வேறு நெருப்பாறுகளைக் கடந்து ஆயுதவழிப் போராட்டமாகமுனைப்புப்பெற்றது. முள்ளிவாய்க்கால் மண்ணில் பல நாடுகளின் உதவியோடுசிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பினால் ஈடுசெய்யமுடியாத பேரிழப்புகளுடனும் ஆற்ற இயலாத துயருடனும் ஆயுதப்போராட்டம்மௌனிக்கப்பட்டது. இன்றுவரை சிங்கள அரசு வெவ்வேறு வடிவங்களில் தமிழினஅழிப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தமிழின அழிப்புக்கு நீதி கேட்டும்வன்பறிப்புச் செய்யப்பட்ட தமிழீழ தேசத்தை மீட்டுஇ தமிழர் உரிமைகளைநிலைநாட்டுவதற்காகவும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அறவழியில்போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்

தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.

மேலும்