Read Time:1 Minute, 23 Second
இன்று இந்திய தூதுவர் கோபால் பக்லே, யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுடன் யாழ் பண்பாட்டு மையம் மற்றும் யாழ் பொது நூலகத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு பின்னர் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டனர்.இந்த சந்திப்பின் போது யாழ் பண்பாட்டு மையத்தில் எதிர் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன்,
மிக விரைவில் பண்பாட்டு மையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது பற்றியும் அதனை நிர்வகிப்பதற்கான செலவுகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
சிறீலங்காவுக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே.பதவியேற்ற பின்னர் இடம்பெறும் முதலாவது பயணம் இதுவாகும்.நான்கு நாள் பயணமாக அவர் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் இந்தியாவின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதுடன், அரசியல் மற்றும் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்