பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை அகிம்சைப் போராட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஒன்று சிவில் அமைப்புக்கள், மாநகரமுதல்வர் மற்றும் ஒன்றிணைந்த தமிழ் தேசியக்கட்சிப்பிரதிநிதிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இன்று முற்பகல் இடம்பெற்றது.
யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாண சிவில் அமைப்புக்களின் மற்றும் தமிழ்பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட வடகிழக்கு முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்புக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு, வடகிழக்கு தமிழ்க்கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பிவைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் வடகிழக்கு சிவில் அமைப்புகள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நாளை மறுதினம் 3ம் திகதி முதல் 6ம் திகதிவரை நடத்தத் தீர்மானித்துள்ளன.