0
0
Read Time:1 Minute, 2 Second
தியாகதீபம் திலீபன் ஞாபகார்த்தமாக தியாகதீபம் திலீபன் ஏற்பாட்டுக்குழுவினால் செப்ரெம்பர் 24 மற்றும் 25ம் திகதிகளில் நல்லூரில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தியாகதீபம் திலீபன் ஏற்பாட்டுக்குழுவினர், பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.