யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் சுவிஸ்வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடல்

1 0
Read Time:1 Minute, 46 Second

08.05.2022 அன்று சுவிஸ் நாட்டின் தலைநகரான பேர்னில் சுவிஸ்வாழ் தமிழர்களுடன் ஒரு கலந்துரையாடலினை மேற்க்கொண்டார். அக்கினிப் பறவைகள் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட கலந்துரையாடலில் வி. மணிவண்ணனுடன், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரனும் மற்றும் யாழ் மாநகர சபையைச் சேர்ந்த வ. பார்த்தீபனும் பங்குபெற்றியிருந்தனர்.

அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் தாயகத்தைப் புனரமைக்கும் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதினை தெரியப்படுத்தியிருந்தனர். அரசாக்கியமான முறையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தற்போதைய சூழ்நிலையில் தயக்கத்தினை எவ்வாறு புனரமைத்து கட்டியிழுப்புவது தொடர்பாக உரையாடப்பட்டது.

தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் தற்போதைய நிலை, தமிழர் பாராளுமன்ற அரசியலின் தற்போதைய நிலை மற்றும் இலங்கைத் தீவின் இப்போதைய நிலைமையை தமிழர்கள் எவ்வாறு உபயோகிப்பது தொடர்பான கேள்விகளுக்கு வி.மணிவண்ணன் பதிலளித்தார். இக்கலந்துரையாடலினை நல்லபடியாக முடித்தவுடன், அடுத்த சந்திப்புக்கான பயணத்துக்கு தாயகத்திலிருந்து வந்தோர் புறப்பட்டுச்சென்றனர்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment