எம்ஜிஆர் என்கிற ஒரு ஆளுமை உலக புகழ் பெற்றிருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அவருடைய அரசியல் உலக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
அதில் மக்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட விடயம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை அவர் கையாண்ட விதம்.
எமக்கு என்ன தேவை என்பதை முழுமையாக உணர்ந்து இருந்தார்.
அது ஈழ மக்கள் மத்தியிலும், உலக தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய வரவேற்பினை பெற்று தந்தது எம்ஜியார் அவர்களுக்கு……
2009 இறுதிகட்ட யுத்தத்திற்கு பிறகு என்னில் அடங்கா அடக்குமுறைகளையும், பிரச்சனையையும் சந்தித்து வந்த எம் மக்கள் தற்போது பொருளாதார சிக்கலில் சிக்குண்டு வறுமையில் சிதைந்து கொண்டிருக்கும் தகவலை அறிந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள், வறுமையில் வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து உற்பட பல் வேறு உதவிகளை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியது…,,
மிகவும் மகிழ்ச்சியான விடயம்,,
பணிவோடு இதை வரவேற்கிறோம்…
தமிழ்நாட்டில் இருந்து எங்களுக்கு கிடைக்கும் உணவு, உடை, மருந்து சில நாளில் முடிந்து விடும். சில நாட்கள் வயிற்றுபசியும் நீங்கிவிடும்..
ஆனால்,
எங்களுக்கு இருப்பது வயிற்று பசி அல்ல!!!…
சுதந்திர பசி எங்களை முழுமையாக வைக்கின்றன…,
2009க்கு பிறகு சிங்கள பேரினவாத அரசால் நாங்கள் மேலும் மேலும் ஒடுக்கப்படுகிறோம்.
ஒடுக்கப்பட்ட எமக்கு தேவை இன விடுதலை.
சுதந்திர காற்றை சுவாசிக்க நித்தம் நித்தம் மூச்சு திணறுகிறோம்.
அரை நூற்றாண்டு காலமாக எம் மக்களின் இன விடுதலைக்காக தொடர்ந்து போராடி வந்த நாங்கள் அனைத்தையும் இழந்து ஆதரவு அற்ற நிலையில் நிற்பதை மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மனதில் நிறுத்தி, ஈழத்தமிழர் இன விடுதலைக்கு முதல் ஆளாக உழைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு…!…
எங்களது தேவை அரிசி, பருப்பு, மாவு, சீனி, தேங்காய் அல்ல..!..
எங்களுக்கு தேவை எங்களது அடையாளம்.
உரிமை, விடுதலை,,,,,
தமிழ் என்றாலே அதன் அடையாளம் ஈழத்தமிழர்கள், அந்த அடையாளமே அழியும் அபாயத்தில் உள்ளது…
இந்த அபாயங்களில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பாற்ற நிரந்தர தீர்வு கிடைக்க மத்திய அரசிற்கு அழுத்தங்களை கொடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் உள்ள ஏனைய தலைவர்களையும் ஒரு குடையின் கீழ் திரட்டி உடனடியாக ஈழத்தமிழர்களின் தீர்வுக்கான வேலையை தொடங்குவதற்கு சரியான தருணம் இதுவே.
தனி தமிழ் ஈழம் ஒன்றே எமக்கான தீர்வு…
இவன்..
மருதையா லோகநாதன் (எ) கஜன்
நிறுவனர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
அனைத்துலக மனித உரிமை சங்கம்.
பிரான்ஸ்