தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் ,அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 08/09/2021 இன்று புதன்கிழமை காலை Belfort நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Danjoutin, Arbouans, Villars sous Écot, Voillans, Autechaux, Pouligney-Lusans, Braillans, École-Valentin, Besançon, ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. Besançon நகரசபையுடன் எட்டாவது நாள் நிறைவடைந்தது.
மேலும் சில பிரெஞ்சு நாளேடுகள் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிக்கான இப்பயணத்தை முதன்மை செய்தியாக்கி உள்ளனர்.
மற்றும் சில நகரசபைகள் குளிர்பாணங்கள் சிற்றுண்டிகள் வழங்கி மிகவும் அன்போடு வரவேற்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் தொடர்பாக விரிவாக தெரிந்து கொண்டனர். மேலும் தமிழ்மக்களுக்கு ஆதரவான தீர்மானம் விரைவில் நிறைவேற்ற ஒழுங்குகள் செய்வதாக உறுதி அளித்தார்கள்.