சிறிலங்கா அரசை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்துங்கள் என்ற கோரிக்கையுடன் ஏழாவது நாளாக ஐ.நா நோக்கி தொடர்ந்து பயணிக்கும் நீதிக்கான பயணம் தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் ,அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 07/09/2021 இன்று செவ்வாய்க்கிழமை காலை Kintzheim நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Ostheim, Ostwald, Colmar Wettolsheim, Eguisheim, Rouffach, Issenheim, Staffelfelden, Mulhouse, Diefmatten, ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.
மேலும் சில பிரெஞ்சுப் பத்திரிக்கைகள் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிக்கான இப்பயணத்தை முதன்மைச்செய்தியாக்கி உள்ளனர். மற்றும் சில நகரசபைகள் குளிர்பாணங்கள் சிற்றுண்டிகள் வழங்கி மிகவும் அன்போடு வரவேற்று அரவணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Mulhouse நகர் வாழ் தமிழீழ உறவுகளும் எமது நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் வரலாற்றுக் கடமையைச் செய்தனர்.