பிரான்சு பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த நீதிக்கான பயணம் ஐரோப்பிய பாராளுமன்றத்தை வந்தடைந்தது.

0 0
Read Time:1 Minute, 54 Second

சிறிலங்கா அரசை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்துங்கள் என்ற கோரிக்கையுடன் ஆறாவது நாளாக ஐ.நா நோக்கி தொடர்ந்து பயணிக்கும் நீதிக்கான பயணம் தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் ,அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம்

06/09/2021 இன்று திங்கட்கிழமை காலை Saverne நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி பிரான்சின் கிழக்கே அமைந்துள்ள அல்சாஸ் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரசபைகளான Strasbourg, Ostwald, Illkirch-Graffenstaden, Benfeld, Huttenheim, Ebersheim, Sélestat ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.

மற்றும் சில நகரசபைகள் குளிர்பாணங்கள் சிற்றுண்டிகள் வழங்கி மிகவும் அன்போடு வரவேற்று அரவணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிராஸ்சில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் காலை 9.00 மணி முதல் மாலை 17.00 மணிவரை கவனயீர்பு மற்றும் தமிழினப்படுகொலை ஆதாரநிழற்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டது. Strasbourg நகர் வாழ் தமிழீழ உறவுகளும் எமது நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் வரலாற்றுக் கடமையை செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment