மாவீரம்தான் எங்கள் வல்லமையின் நாதம்

1 0
Read Time:1 Minute, 36 Second

மாவீரம்தான் எங்கள் வல்லமையின் நாதம்

தீக்குளம்பாகவே மனங்கள் கொதிக்கும்
திரும்பும் திசையெங்கும் மாவீரம் சிரிக்கும்
அரும்பும் எரிகொண்டு நின்று
சிலிர்க்கும்
விரும்பும் விடுதலைக்காய்
வேகம் தரிக்கும்
கார்த்திகைப்பொழுதினில்
கருக்கொள்ளும் வீரம்
கல்லறை இல்லங்கள்
காவியப்பண் பாடும்
தாயகம் வேண்டும்உயிர்
உருக்கொண்டு சீறும்
தமிழீழம் உயிர்பெறவே
ஊழிக்கூத்தாடும்-
மாவீரக்கரகமது பூமியைப்பிளக்கும்
மண்ணிலே தமிழ்மானம்
எழுந்து வானளக்கும்-அந்த
இசைவந்து எம்முயிரை
ஏதேதோ செய்யும்.
கசிகின்ற விழியோரம்
பெருவுறுதி நெய்யும்
உளமார உருகிமனம்
அவர்முகங்கள் தேடும்
விளக்கேற்றி நிமிர்கையிலே
உளமேற்கும் சபதம்-அது
விடுதலையின் வாசல்வரை
ஓயாத நகர்வு-வீர
வேட்கைசுமந்துவீழ்ந்த
வேங்கையரின் கனவு

அடிநெஞ்சில் அண்ணன்தன்
அடிச்சுவடு வேதம்
மாவீரம்தான் எங்கள் வல்லமையின் நாதம்
தீராது விடியல்வரை
தாயகத்தின் தாகம்
திமிர்கொண்டே நடக்கிறோம்-இது
விடுதலைப் பெருயாகம்.

கலைமகள்
27.11.2020

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
100 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment