சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பலை கற்பிட்டிக் கடற்பரப்பில் மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்

0 0
Read Time:7 Minute, 45 Second

கடற்புலிகளின் வரலாற்றில் ஒருமைல் கல்லாக பதிவாகிவிட்ட இலங்கை கடற்படையின் சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பலை கற்பிட்டிக் கடற்பரப்பில் மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல் 


வடமராட்சிக் கடற்பகுதியில் கடலில் வலைவீசி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மீதான தாக்குலுக்குப் பதிலடியாக கடலில் ஒருதாக்குதல் நடாத்துமாறு. தேசியத் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கமைவாக கடற்புலிகளின் அணிகள் பிரிக்கப்பட்டு சிறப்புத் தளபதி சூசை அவர்கள், தளபதி கங்கைஅமரன் அவர்கள், துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்கள் தலைமையில் வேவு நடவடிக்கைகளுக்கு நாலாபுறமும் அனுப்பப்டடன வேவு வீரர்களின் கண்களில் சிக்கிக்கொண்டது சிறிலங்கா கடற்படையில் 1984ம் ஆண்டு சேவையில் அமர்த்தப்பட்ட சாகரவர்த்தனா கப்பல்.
இலங்கை கடற்படையின் நான்கு பெரிய ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களில் சாகராவர்த்தனாவும் ஒன்றாகும் .இது 39.8m நீளமும் 7m அகலமும் கொண்டதாகும். இதன் பிரதான ஆயுதங்களான ஒரு 40mmL/70 பீரங்கியும், இரண்டு 25mm கனோனும், இரண்டு 14.5mm கனரகத்துப்பாக்கி, இரண்டும் ஐம்பது கலிபர் துப்பாக்கிகள், பி.கே ரகத் துப்பாக்கிகள், ஏ.கே ரகத் துப்பாக்கிகளும் உள்ளடக்கிய இக் கப்பல் 15 (knots) வேகத்தில் செல்லும் (மணித்தியாலத்தில் பதினைந்து கடல்மைல் வேகத்தில் செல்லும்) இக்கப்பலில் கட்டளை அதிகாரியாக பொயாகொட மற்றும் அவரின் கீழ் ஐம்பத்தியிரண்டு கடற்படையினர் பணியிலிருந்தார்கள்.
இப்பாரிய கப்பல் பற்றிய தகவல்கள் தேசியத் தலைவர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ‘எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும்’ என்ற தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக இந்த பாரிய ஆழ்கடல் கப்பலுக்கான தாக்குதற் திட்டம் மிகவும் நேர்த்தியான முறையில் கப்பலின் எந்தப்பகுதி பலவீனம் என்பதை இணங்கண்டு அதற்கேற்ப தாக்குதல் திட்டம் தேசியத் தலைவர் அவர்களால் வடிவமைக்கப்பட்டு கடற்புலிகளுக்கு கொடுக்கப்பட்டது. அது மட்டுமன்றி இப்பாரிய கப்பல் தப்பக்கூடாது என்று உறுதியாகவும் தெளிவாகவும் கூறி கடற்புலிகளை வழியனுப்பி வைத்தார்.
இத்தாக்குதல் திட்டத்தின்படி கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தாக்கி வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலிகள் தமது படகுகளால் மோதி கப்பலை மூழ்கடிப்பார்கள். அதற்கமைவாக 19.09.1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடடலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்புக் கட்டளைக்கப்பல் மீது லெப். கேணல் டேவிற் தலைமையிலான சண்டைப் படகுகள் முறையே மாவீரர்களான லெப். கேணல் நிமல், லெப். கேணல் சலீம், கடற்கரும்புலி லெப். கேணல் ரதீஸ், மேஐர் கண்ணன், கடற்கரும்புலி மேஐர் சுடரொளி, கடற்கரும்புலி கப்டன் தணிகை, கப்டன் தாயகி, மேஐர் சிங்கன், மேஐர் கனியன், கடற்கரும்புலி மேஐர் வினோதா, கப்டன் வில்வம் ஆகியோர் தமது படகுகளால் தாக்கி கடற்கரும்புலிகளுக்கு வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலிகளான லெப். கேணல் நளாயினி, மேஐர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் ஆகியோர் தமது கரும்புலிப் படகுகளால் மோதி கப்பலை மூழ்கடித்து கற்பிட்டக்கடலில் காவியமானார்கள்.
இதுவே கடற்புலிகளால் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக தாக்கி மூழ்கடிக்கப்பட்ட முதலாவது பாரிய கப்பலாகும். அது மட்டுமன்றி கடற்புலிகளின் கடற்தாக்குதல் படையணியான லெப். கேணல் சாள்ஸ் படையணியின் முதலாவது தாக்குதலாகும். அந்தநேரம் ஆண், பெண் போராளிகளை இணைத்து உருவாக்கப்பட்டதே சாள்ஸ் படையணியாகும். இந்நடவடிக்கையில் கடற்புலிகளின் நீரடிநீச்சல் பிரிவின் பங்கும் மிகவும் அளப்பரியது. மேஐர் இன்பநிலா, கடற்கரும்புலி மேஐர் பரன் தலைமையிலான அணியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியையும் செவ்வனவே செய்திருந்தார்கள். இந்நடவடிக்கைகளை தேசியத் தலைவர் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் சிறப்புத்தளபதி சூசை அவர்களும், தளபதி கங்கைஅமரன் அவர்களும், துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரரும் செவ்வனவே வழிநடாத்தியிருந்தர்கள். இத்தாக்குதலில் பல நவீனரக ஆயுதங்களும் கைப்பற்ப்பட்டதுடன் இக்கப்பல் கப்டன் பொயாகொட கடற்புலிகளால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக தேசியத் தலைவர் அவர்களின் உள்ளத்திலிருந்து… ‘சிறிலங்கா கடற்படையின் ஒரு கப்பற் தளபதியை, தமிழீழக் கடற்படையின் ஒரு பெண் தளபதி சிறைப்பிடித்தாள். அவர் உயிரைக் காக்க சரணடைந்தார். இவள் வெற்றியைப் பெற உயிர் துறந்தாள்.
பின்னாளில் இவ் வரலாற்றுக் காவியத்தில் காவியமான கடற்கரும்புலி மாவீரர்களான லெப். கேணல் நளாயினி அவர்களின் பெயர் தாங்கி கடற்புலிகளின் மகளிர் அணியின் ஒரு பகுதியினரை ஒன்றாக்கி ஒரு பெரும் தாக்குல படையணியை உருவாக்கி தமிழீழக் கடலெங்கும் சிறிலங்கா கடற்படைக்கு எதிரான புதிய சாதனைகளை படைக்க வழிவகுத்தார் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அதனுடன் மேஜர் மங்கை அவர்களின் பெயர் தாங்கி கடற்புலிகளின் படகு கட்டுமானம் அமையப்பெற்று கடற்புலிகள் கடற்படைக்கு எதிராக பயன்படுத்தும் பெரும்பாலான படகுகள் மங்கை படகு கட்டுமான மகளீர் போராளிகளால் உருவாக்கம் பெற்றது.
அன்று கற்பிட்டிக் கடலில் சாகராவர்த்தனா கப்பல் மூழ்கடித்து தாக்குதலில் பங்கு பற்றி உயிர் மீண்டோர் கூறிய தகவலுக்கு அமைக்காகவும் இக் காவிய வரைவு இடம்பெறுகின்றது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment