இத்தேர்வானது; முற்றுமுழுதாக தமிழ்த்தேசியம், தமிழீழ இறைமை, தமிழீழத்தின் சிறப்பு, தமிழீழ விடுதலைப்போராட்டம், தேசியத்தலைவர் மற்றும் மாவீரர்கள் பற்றிய கேள்விகளையே முற்றுமுழுதாகக்கொண்டிருக்கும்.
தேர்வில் பங்குபற்ற விரும்புபவர்கள், நீங்கள் வாழும் உங்கள் வலயத்திற்குரிய மின்னஞ்சலுக்கு உங்களது முழுப்பெயர், பிறந்தஆண்டு, தொடர்புஇலக்கம், மின்னஞ்சல்முகவரி ஆகிய விபரங்களை அனுப்பிவையுங்கள்.
உங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், உங்களுக்கான சுட்டிலக்கம், தேர்வுநாள், விடைகளை எழுதுவதற்கான நேரம், ஆகியன அறியத்தரப்படும்.
தேர்வுநாளன்று இணையவழி/ மின்னஞ்சல் வழி உங்களுக்குரிய வினாத்தாள் அனுப்பிவைக்கப்படும். வினாக்களுக்குரிய விடைகளை வேற்றுமொழிக் கலப்பின்றிய தமிழில் தட்டச்சில் / எழுத்தில் அனுப்புதல் முக்கியமானது. உலகம் முழுவதும் சமநேரத்தில் தேர்வு நடைபெறும்.
எழுத்துமூலத் தேர்வு நிறைவுபெற்றதும், தமிழீழம் சம்பந்தமாக, உங்களுக்குப் பிடித்த ஏதாவதொரு தலைப்பில் 3நிமிடம்30 விநாடிகளுக்கு (மூன்றரை நிமிடம்) மேற்படாதவாறு உரையாற்றி ஒலி/ ஒளி வடிவில் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
எழுதப்பட்ட விடைகளையும், உரையாற்றலையும் மதிப்பீடு செய்து, புள்ளிகள் வழங்கப்படும். ஒருவரிற்கு மேற்பட்டோர் சமபுள்ளிகளைப் பெறுமிடத்து, உரையாற்றல்பகுதியானது பொதுமக்களின் கருத்துக்கணிப்பிற்கு விடப்பட்டு, அதிக வரவேற்பைப்பெறுபவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
தொடர்புகளுக்கு :
தேர்வுத் தலைமையாளர் திரு. வலன்ரைன் whatsapp : 0049163 3590849email : l.valentine@hotmail.de
வலய ஒருங்கிணைப்பாளர்கள்
அமெரிக்க/ கனேடிய வலயம்: ஜெயந்தன் whatsapp: +1 647-695-4055email :Poopathi2021canada@gmail.com
ஐரோப்பிய வலயம் :வசந்தன் whatsapp: 004915216969449email: poopathieurope@gmail.com
ஆசிய / அவுசுத்திரேலிய வலயம் : திலீபன் whatsapp: 0091 8248926115email: poopathi2021tamil@gmail.com
விண்ணப்ப எல்லைக் காலம் : 10.03.2020
அன்னைபூபதி தமிழீழ அறிவுத் தேர்வுக்குழுமம்