காட்டாற்று வெள்ளமாக முன்னேறும் பேரணி: திண்டாடும் பொலிஸ், இராணுவம்!
தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் இளைஞர்கள் அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து மாபெரும் தொடர் போராட்டம்
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம் மக்களிடமும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஷீர், மக்கள் காங்கிரஸ் முன்னாள் அட்டாளைச்சேனை தவிசாளர் அன்ஷில் உள்ளிட்ட முஸ்லிம்களும் இணைந்து கொண்டனர்.
பொலிஸ் ,STF இன் தடைகளை தாண்டி பேரணி அக்கரைபற்றை அண்மித்துள்ளது கொரோனா தனிமை படுத்தல் தொடர்பில் பொலிஸார் போராட்டகாரர்களை எச்சரிக்கை செய்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை ,மத குருக்களை அச்சுறுத்தும் பொலிஸார் ,STF .
தடைகளைத் தாண்டி அக்கரைப்பற்று நகரில் பேரணி