Read Time:1 Minute, 14 Second

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக விசாரணையை வலியுருத்தி இன்று மூன்றாம் நாள் 06/09/2020 நெதர்லார்ந்து நாட்டின் பெரேடா மாநகரின் நகரபிதாவைச் இணையவழியில் சந்தித்ததுடன்,
தற்போதய காலகட்டத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் பல வகைகளில் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதையும், 11 ஆண்டு காலம் கழிந்தும் தமிழர் தாயகத்தில் எம் இனம் ஒரு திட்டமிட்டமுறையில் மறைமுகமான இனவழிப்புக்குள்ளாக்கப் படுகின்றார்கள் எனவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டம் பற்றியும், பல முக்கிய அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களினால் மனு கையளிக்கப்பட்டது. அறவழிப் போராட்டாம் பெல்ஜியம் நோக்கி பயணிக்கின்றது….


