பேணிப்பாதுகாக்க வேண்டிய வராற்றுப் பொக்கிசமான நல்லூர் சங்கிலியன் மந்திரி மனையானதுதொல்பொருள் திணைக்களத்தினால் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது காணப்படுகிறதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
நல்லூர் சங்கிலியன் மந்திரி மனையின் பழமையினை பாதுகாப்பதற்கு மத்திய அரசின் கீழ் செயற்படும் தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளனர்
மந்திரிமனை அமைந்துள்ள இடத்திற்கு ஒரு காவலாளி கூட கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை
எப்போதும் திறந்தே காணப்படுவதன் காரணமாக
. எந்தவித அனுமதியுமின்றி
புகைப்பட படப்பிடிப்பாளர்கள், மதுப்பிரியர்கள், சமுகவிரோதசெயலில் ஈடுபடுவோர் என பல தரப்பினரும் தமக்குரியவாறாக அந்த இடத்தினை பயன்படுத்திவருகின்றனர்
தென்னிலங்கையில் இவ்வாறான வரலாற்று பொக்கிசங்கள் சரியான முறையில் பேணிபாதுகாக்கப்படும் நிலையில்
வடக்கிலுள்ள தொல்பொருள்சான்றுகள் பாதுகாக்கபடவில்லையென சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
வீட்டிலுள்ள வரலாற்று தொன்மையான இடங்களை பேணிப் பாதுகாப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்